Skip to main content

வீடு கட்டித் தருவதாக 1.61 கோடி ரூபாய் மோசடி; முன்னாள் பாஜக பிரமுகர் கைது!

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Fraud of 1.61 crore rupees for building a house; Former BJP leader arrested!

 

சேலம் அருகே, வீடு கட்டித் தருவதாக ஜவுளி வியாபாரியிடம் 1.61 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக பாஜக முன்னாள் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி எஸ்.கே.சிட்டி குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிர் ராஜ் (52). ஜவுளி வியாபாரியான இவர், மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (33). பாஜக முன்னாள் பிரமுகரான இவர், கட்டட ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். இவர் மீது சில மோசடி புகார்கள் வந்ததை அடுத்து பாஜக தலைமை சுரேந்திரனை ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கிவிட்டது.

 

இந்நிலையில், ஜவுளி வியாபாரி கதிர் ராஜ் கடந்த 2019ம் ஆண்டு தனக்குப் புதிதாக வீடு கட்டிக் கொடுக்கும்படி சுரேந்திரனிடம் கேட்டுள்ளார். இதற்காக சதுர அடிக்கு 2,200 ரூபாய் வீதம் ஒப்பந்தம் பேசி, கட்டுமான செலவுக்காக 1.61 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சுரேந்திரனோ கதிர் ராஜுக்கு வீடு கட்டிக் கொடுக்காமல் அந்தப் பணத்தில், நிலவாரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த கதிர் ராஜ் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு சுரேந்திரனிடம் பலமுறை கேட்டுப் பார்த்தும் அவர் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

 

இதையடுத்து, மல்லூர் காவல் நிலையத்தில் சுரேந்திரன் மற்றும் அவருடைய மனைவி தீபா ஆகியோர் மீது புகார் அளித்தார் கதிர் ராஜ். காவல்துறையினர் விசாரணை நடத்தி இருவர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். மோசடி தொகையின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சென்றதால், இந்த வழக்கு உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து மாவட்டக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளமுருகன் மீண்டும் அந்தப் புகார் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே அவர்கள் இருவரும் திடீரென்று தலைமறைவாகி விட்டனர்.

 

குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜன. 23) சுரேந்திரனை கைது செய்தனர். அவரை, சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுரேந்திரனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்