Skip to main content

கலைஞர் பிறந்தநாள் - ஐந்து திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

former chief minister and dmk chief kalaignar birthday chief minister mkstalin

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, ஐந்து திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03/06/2021) தொடங்கிவைத்த திட்டங்கள் குறித்து பார்ப்போம்!

 

ரேஷனில் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

former chief minister and dmk chief kalaignar birthday chief minister mkstalin

 

ரேஷனில் 14 மளிகைப் பொருட்கள் இலவசம்!

கரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.

 

14 மளிகைப் பொருட்கள் என்னென்ன?

1. கோதுமை மாவு - 1 கிலோ,
2. உப்பு - 1 கிலோ,
3. ரவை - 1 கிலோ,
4. உளுத்தம் பருப்பு - 1/2 கிலோ,
5. சர்க்கரை - 1/2 கிலோ, 
6. புளி - 1/4 கிலோ,
7. கடலை பருப்பு - 1/4 கிலோ,
8. கடுகு - 100 கிராம்,
9. சீரகம் - 100 கிராம்,
10. மிளகாய் தூள் - 100 கிராம்,
11. மஞ்சள் தூள் - 100 கிராம்,
12. டீ தூள் இரண்டு பாக்கெட் - 100 கிராம்,
13. குளியல் சோப்பு - 1 (125 கிராம்),
14. துணி சோப்பு - 1 (250 கிராம்).

 

அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை திட்டம் தொடக்கம்!

பூசாரிகள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 4,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கியது.

 

12,959 கோயில்களில் மாத சம்பளமின்றிப் பணியாற்றும் சுமார் 14,000 பேருக்கு ரூபாய் 4,000 நிதியுதவி வழங்கப்படும். ரூபாய் 4,000-த்துடன் 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்களும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படுகிறது. 

former chief minister and dmk chief kalaignar birthday chief minister mkstalin


முன்களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!

கரோனாவால் இறந்த முன்களப்பணியாளர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். கரோனாவால் இறந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கரோனாவால் இறந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

 

'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' - 10 பேருக்கு நலத்திட்டம்!

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 10 பயனாளிக்கு அரசு பயன்களை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

 

சென்னை தலைமைச் தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தமிழக தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.