Skip to main content

காதலிப்பதை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி!

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
Suicide attempt



காதலிப்பதை ஆசிாியா்  கண்டித்ததால் +2 மாணவி  பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

           நாகா்கோவில் வடசோியில் அரசு உதவியுடன் செயல்படும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்ச்சி விகிதத்திலும் மாவட்ட அளவில் நல்ல பெயா் இந்த பள்ளிக்கு உள்ளது. 
 

           இந்த நிலையில் அந்த பள்ளியில் +2 படித்து வரும் புத்தோியை சோ்ந்த மாணவி முதல் மதிப்பெண் எடுத்து  ஆசிாியா்களிடம் நல்ல மாணவியாக பெயா் எடுத்து வந்தாள். இந்த நிலையில் அந்த மாணவிக்கும்  அதே பள்ளியில் படிக்கும் ஓரு மாணவனுக்கும் இடையை காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் அந்த மாணவிக்கு படிப்பின் மீது இருந்த கவனம் சிதறியதால் ஆசிாியா்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 
 

            இதற்கு காரணம் அந்த மாணவியின் காதல் என தொிய வந்ததோடு அதை ஆசிாியா்கள் சிலரும் பாா்த்துவிட்டதால் ஆத்திரமடைந்த பள்ளியின் உதவி தலைமையாசிாியா்  அந்த மாணவியை அழைத்து அறிவுரை கூறியதோடு மாணவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. 
 

             இதனால் அவமானம் ஏற்பட்ட மாணவி மாலை பள்ளி விடும்போது பள்ளியின் இரண்டாவது மாடியில் ஏறி நின்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறாா். இதில் மாணவிக்கு கால் முறிந்ததோடு உடம்பிலும் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்