Skip to main content

ஈரோடு தொகுதியில் மதிமுக மகத்தான வெற்றி!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

 

mdmk

 

இன்று காலை வாக்கு எண்ணும் பணி துவங்கியதிலிருந்து முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த கணேசமூர்த்தி இறுதிச்சுற்றில் 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருப்பது ஈரோடு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை மிகப்பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்