Skip to main content

வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை!!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

கோவையில் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை பலவித போராட்டங்களுக்கு பிறகு கரையேறியது.

 

elephant

 

 

 

மேற்குத்தொடர்ச்சிமலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பில்லூர் அணை நிரம்பியுள்ளது. இந்தநிலையில் அணையின் பாதுகாப்புக்காக பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சமயபுரம் எனும் இடத்தில் பவானி ஆற்றில் இறங்கி ஆற்றை கடக்க முயற்சித்த காட்டுயானை வெள்ளத்தில் சிக்கித்தவித்தது. 

 

elephant

 

 

 

பலவித முயற்சிகளுக்கு பிறகு வெள்ளத்தில் சிக்கிய காட்டுயானை வேறு வழியின்றி கரையேறியது. அதன்பிறகு அங்குவந்த வனத்துறையினர் வெள்ளத்திலிருந்து மீண்ட காட்டுயானையை வேறுஒரு வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

சார்ந்த செய்திகள்