Skip to main content

அமைச்சரின் நிகழ்ச்சியிலேயே தூங்கி வழிந்த மருத்துவர்!-வைரலாகும் வீடியோ

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

The doctor who fell asleep at the minister's show! -Viral video

 

இன்று ஜூலை 1 சர்வேதச மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சென்னை எழும்பூரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மலர்க்கொத்து கொடுத்து அமைச்சர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் அமைச்சர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பங்குபெற்ற மருத்துவர் ஒருவர் அமர்ந்த படியே தூங்கும் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பரபரப்பாக நிகழ்ச்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மருத்துவர் ஒருவர் அசந்து தூங்கியதை யாரோ செல்போனில் வீடியோ பதிவு செய்து வெளியிட அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நிகழ்ச்சியின் இறுதியில் தேசியகீதம் ஒலிக்கப்பட்டவுடன் சிறிது நேரம் கழித்துத் தூங்கிக்கொண்டிருந்த மருத்துவர் எழுந்து நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்