Skip to main content

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர்; வசமாகப் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Deputy District Collector who took bribe; Anti-bribery police in possession

 

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரை கைது செய்தனர். 

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வெட்டியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தண்டலையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் நிலத்தை பட்டா மாற்றம் செய்வதற்காக இணைய வழியில் விண்ணப்பித்துள்ளார்.

 

அதனையடுத்து சுரேஷ், சரவணனை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு துணை வட்டாட்சியர் சரவணன், பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ. 10,000 லஞ்சமாக கேட்டுள்ளார். தன் நிலத்தை பட்டா மாற்றுவதற்கு லஞ்சமா என சுரேஷ், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன்பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து சரவணனிடம் கொடுக்கச் செய்துள்ளனர்.

 

அந்த ரூபாய் நோட்டுகளை சுரேஷ், சரவணனிடம் கொடுக்கச் சென்றபோது, சாம்பசிவம் மற்றும் வீரா ஆகிய இருவர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்களிடம் பணம் கைமாறி துணை வட்டாட்சியர் சரவணனிடம் பணம் சென்று சேரும் வரை டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையில், ஆய்வாளர் கவிதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் பவுன்ராஜ், ரவி அடங்கிய குழுவினர் பொறுமையாக இருந்தனர். பிறகு மூவரையும் கையும் களவுமாக பிடித்தனர். அதன்பிறகு அவர்கள் மூவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

மூடநம்பிக்கை;‘பேரனைக் கொன்ற தாத்தா’ - விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Ariyalur district near Jayangondam Utkotai village boy child incident

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது உட்கோட்டை கிராமம். இங்கு வசித்து வந்தவர் வீரமுத்து. இவரது மகள் சங்கீதாவுக்கும் கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தகைய சூழலில்தான் சமீபத்தில் இத்தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) இரவு நேரத்தில் யாரோ துணியில் சுற்றி குளியல் அறையில் உள்ள வாளி நீரில் போட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மூட நம்பிக்கையில் பேரனை தாத்தா கொன்றது தெரியவந்துள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால், உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையில் கொலை செய்துவிட்டு, நாடகமாடியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது.