Skip to main content

மழைக்கு இறந்த ஆடுகள்- துக்கம் விசாரிக்க வந்த மந்திரி

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 100 லிட்டர் மோர் விற்பனையே 12 மணிக்கே முடிந்துவிடும் அளவுக்கு மக்கள் தாகத்தை தணிக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இந்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான, மிதமான காற்றுடன் மழை பெய்தது. 

 

The dead sheep in the rain - the minister who came to inquire about sadness

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் ஏப்ரல் 30ந்தேதி இரவு, திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துன. ஆம்பூர் ஆயிஷாபி நகர், பிலால் நகர், புதுமனை ஆகிய பகுதிகளில் 8க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, அங்குள்ள ஒரு பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் மின் கம்பிங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையின் போது ரயில் நிலையம் அருகே உள்ள மரக்கிளைகள் உடைந்து சாலை அருகே விழுந்தது. தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருந்த உயர் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்லாமல் நின்றன. 

 

The dead sheep in the rain - the minister who came to inquire about sadness

 

இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நின்றது. தகவலறிந்து வந்த மின்சார துறையினர் மற்றும் ஆம்பூர் போலீசார், மின் இணைப்பு துண்டித்து பொதுமக்கள் உதவியுடன் மின்கம்பிகளை அகற்றினர். பின்னர் போக்குவரத்து தொடங்கியது. அதேப்போல், வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் ஜானகி என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கொட்டகையில் 20 ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். மழையினால் ஆட்டு ஆட்டுக்கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த 8 ஆடுகள் பலியானது.

 

The dead sheep in the rain - the minister who came to inquire about sadness

 

இதுப்பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், வட்டாச்சியர் முருகன் சேதமடைந்த பகுதிகைள பார்வையிட்டனர். ஆட்டு கொட்டகை விழுந்து பலியான ஆடுகளின் உரிமையாளர் ஜானகியை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்கள்.

 

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாததால் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி தேர்தலின்போது வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் நிலோபர் ஆறுதல் கூற வந்துள்ளார் என அங்கிருந்த மக்கள் முணுமுணுத்தனர். இதற்கு முன்பு இதுப்போல் மழைக்காலங்களில் பெரும் துன்பத்தை மக்கள் அனுபவித்தபோது வீட்டை விட்டு வெளியே வராதவர் தான் இந்த அமைச்சர் என்கிறார்கள் இன்னும் சிலர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.