Skip to main content

பேருந்துகள் இயக்கம்- ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்!

Published on 06/09/2020 | Edited on 06/09/2020

 

coronavirus lockdown tamilnadu buses operating driver

வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

 

அதன் படி, கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநர்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு- காலை 04.00 மணி வரை நடத்துனர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வழித்தடங்களில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதால் கவனமாக பணிபுரிய வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை இருப்பதால் ஓட்டுநர்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்