Skip to main content

“அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம்.. கடைசியில ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு"... ஆழ்ந்த வருத்தத்தில் தம்பி ராமையா

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

The comedian who lost his real hero; The whole family in deep grief

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ராராபுரம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த தம்பி ராமையா, சினிமாத்துறையில் பிரபலமடைந்து சாதித்துவருகிறார். சினிமாவில் சாதிக்கத் தொடங்கினாலும் பிறந்த மண்ணையும், உடன் பிறந்தோர், உறவுகளையும் நேசிப்பவர். அவரது உடன்பிறந்த தம்பி உமாபதி, இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு திருமணமான 10 வருடங்களுக்குப் பிறகு இரட்டை ஆண் குழந்தைகள் அகிலன், முகிலன் பிறந்தனர். உமாபதி ரியாத்தில் வாட்டர் ஹீட்டர் ப்ராஜெக்டில் 2014ஆம் ஆண்டு 'மிஸ்டர் ப்ரைன்' அவார்டு வாங்கியுள்ளார்.

 

சில மாதங்களுக்கு முன்பு ராஜகுமாரியின் தந்தை உடல்நக்குறைவால் உயிரிழந்ததால் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு வந்தனர். தந்தை இறந்த 15 நாட்களில் மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த தம்பியும் கரோனாவுக்குப் பலியான நிலையில், அடுத்து அவரது தாயாரும் உயிரிழந்தார். இப்படி தன் குடும்பத்தில் ஒவ்வொரு உயிராக பறிபோவதை நினைத்து மனமுடைந்திருந்த ராஜகுமாரிக்கு, 25 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று கண்டறியப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

The comedian who lost his real hero; The whole family in deep grief

 

இப்படி அடுத்தடுத்து நடக்கும் துயரங்களைத் தாங்கமுடியாமல் கதறிக்கொண்டிருக்கிறார்கள் தம்பி ராமையாவின் குடும்பத்தினர். தம்பி ராமையா இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் உள்ளவர். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விவேக் உயிரிழந்தபோது, அவரது நினைவாக புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் இளைஞர்கள் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனால் உலகமெங்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர். கொத்தமங்கலம் இளைஞர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு 'நம் புதுக்கோட்டை மண் எப்பவும் முன்னோடியான மண் என்பதைக் காட்டிவிட்டீர்கள்' என்று பாராட்டினார். 

 

இந்த நிலையில்தான், தம்பி ராமையாவின் தம்பி மனைவி ராஜகுமாரி கரோனா தொற்று ஏற்பட்டு இறந்த தகவல் அறிந்த கொத்தமங்கலம் பசுமைப் புரட்சி ரமேஷ் என்ற இளைஞர், அய்யனார் கோயில் வளாகத்தில் ராஜகுமாரி பெயரில் மரக்கன்று நட்டு இன்று மண்ணுக்குள் விதையாக விழுந்த ராஜகுமாரி, விருட்சமாக எழுந்து நிற்பார் என்றார். சோகத்தில் இருக்கும் நடிகர் தம்பி ராமையைா, “என் உடன் பிறந்த தம்பி உமாபதிதான் என் வாழ்க்கையின் நிஜ ஹீரோ. தம்பி மீதான பாசத்தால்தான் என் மகனுக்கு உமாபதி என்று பெயர் வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையில் மிகப் பெரிய கொடூரமான நாட்கள். அந்த 25 நாட்களும் நிம்மதி இல்லாமல் துடிச்சோம். 

 

கடைசியில் ரிசல்ட் ஜீரோவாகிப் போச்சு. இந்தக் கரோனா என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்துவிட்டேன். என் அன்பு உறவுகளே, அரசாங்க வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடியுங்கள், உயிரிழப்புகளைத் தவிருங்கள். வலியும், வேதனையும் உணர்ந்து சொல்கிறேன்” என்றார். எத்தனை சோகத்தில் இருப்பவர்களையும் தனது அசாத்திய பேச்சால், நடிப்பால், உடல்மொழியால் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த தம்பி ராமையாவின் குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது. எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியவில்லையே என்ற அழுத்தம் அவர்களிடம் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.