Skip to main content

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு; நீதிபதி சந்திரசூட்டை பாராட்டிய முதல்வர்

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Chief Minister mk stalin praised Justice Chandrachud

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்., உச்சநீதிமன்றம் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க தொழில்நுட்பம் உதவும். அதன் முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார். இதனைப் பாராட்டியுள்ள பிரதமர் மோடி, நீதிபதி சந்திரசூட் கூறியது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டின் கருத்தை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வெளியிட வேண்டும் என்ற கருத்தை தான் முழு மனதுடன் வரவேற்பதாக கூறியுள்ளார். அத்துடன் உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழியை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவது நீதியை சாமானிய மக்களின் அருகே கொண்டு வரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்