Skip to main content

18 கி.மீ. வேகத்தில் நகரும் 'புரெவி' புயல்!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

burevi cyclone india meteorological department

 

"வங்கக்கடலில் உருவான 'புரெவி' புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு 200 கி.மீ., கன்னியாகுமரிக்கு 600 கி.மீ. தொலைவிலும் 'புரெவி' புயல் மையம் கொண்டுள்ளது. 12 மணி நேரத்தில் 'புரெவி' புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை (அல்லது) இரவில் இலங்கையின் திரிகோணமலை அருகே 'புரெவி' புயல் கரையைக் கடக்கிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையைக் கடக்கும் போது, 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது" இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்