Skip to main content

கறுப்புக்கொடி: எச்.ராஜா - போலீசார் இடையே தள்ளு முள்ளு!

Published on 14/04/2018 | Edited on 14/04/2018


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் போலீசார் இடையே திடீரென தள்ளு முள்ளு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக் கொடி காண்பித்துள்ளனர். இதில் கோபமடைந்த எச்.ராஜா, கறுப்புக் கொடி காட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றார்.

அப்போது எச்.ராஜாவை போலீசார் தடுத்ததால் பாஜகவினர், காவல்துறையினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே போராட்டத்தின் போது எச்.ராஜா முன்னிலையில் திருமாவளவன் உருவ பொம்மையை பாஜகவினர் எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்