Skip to main content

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அறிவிப்பு

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Announcement of Counting Centers for Corporations, Municipalities and Municipalities in Salem District

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சி என மொத்தம் 38 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள், 6 நகராட்சிகளில் 165 வார்டுகள், பேரூராட்சிகளில் 474 வார்டுகள் என மொத்தம் 699 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

 

மாநகராட்சியில் வாக்களிக்க 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 லட்சத்து 19361 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 6 நாகராட்சிகளில் மொத்தம் 273 வாக்குச்சாவடிகளும், 2 லட்சத்து 25778 வாக்காளர்களும் உள்ளனர். அதேபோல், 31 பேரூராட்சிகளில் 537 வாக்குச்சாவடிகளில் 3 லட்சத்து 90894 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 33 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். இதற்காக மொத்தம் 1519 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப். 22ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 

மாநகராட்சி: 

சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பதிவாக உள்ள வாக்குகள் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்படுகின்றன.  

 

நகராட்சிகளுக்கு:

ஆத்தூர் நகராட்சிக்கு வடசென்னிமலையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மையத்திலும், நரசிங்கபுரம் நகராட்சிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திலும், மேட்டூர் நகராட்சிக்கு மேட்டூர் எம்ஏஎம் மேல்நிலைப்பள்ளியிலும், இடைப்பாடி நகராட்சிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இடங்கணசாலை நகராட்சிக்கு இளம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திலும், தாரமங்கலம் நகராட்சிக்கு செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அறிவிக்கப்பட்டு உள்ளன.  

 

பேரூராட்சிகளுக்கு:  

அயோத்தியாப்பட்டணம், கன்னங்குறிச்சி, வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகளுக்கு அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், இளம்பிள்ளை, மல்லூர், ஆட்டையாம்பட்டி பேரூராட்சிகளுக்கு இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்; கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் பேரூராட்சிகளுக்கு கெங்கவல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, பூலாம்பட்டி பேரூராட்சிகளுக்கு ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காடையாம்பட்டி, ஓமலூர், கருப்பூர், மேச்சேரி பேரூராட்சிகளுக்கு ஓமலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

 

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி பேரூராட்சிகளுக்கு தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வீரக்கல்புதூர், பி.என்.பட்டி, கொளத்தூர் பேரூராட்சிகளுக்கு மேட்டூர் டேம் வைத்தீஸ்வரன் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி, கொங்கணாபுரம், தேவூர், அரசிராமணி பேரூராட்சிகளுக்கு சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்; பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகளுக்கு பெத்தநாயக்கன்பாளையம் அரசு பெண்கள் நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.