Skip to main content

நடிகர் வடிவேலு - நில உரிமையாளர் இடையே சமரசம் 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
va

 

நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 1993ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலியூரில் உள்ள தனது 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார்.  இந்த கடன் தொகையை  செலுத்தாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு பொது ஏலம் மூலம், சென்னை அசோக் நகரை சேர்ந்த சொக்கலிங்கம் பழனியப்பன் என்பவருக்கு விற்றது.

 

இந்த நிலையில், ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள்  அந்த நிலத்தை விற்க, நடிகர் சிங்கமுத்துவுக்கு பவர் ஆப் அட்டர்னி எழுதி கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து  நடிகர் வடிவேலுவுக்கு இந்த நிலம் விற்பனை செய்யபட்டது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தாக கூறி நடிகர் வடிவேலு உள்ளிட்டோரை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தவும் நிலத்தின் உரிமையை தனக்கு உறுதி செய்யவும் கோரி  பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

மோசடி செய்ததாகக் கூறிய பழனியப்பன் உள்பட இருவருக்கு  எதிராக 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த அனைத்து வழக்குகளும்  நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது நில பிரச்னை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன்  இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான  வரைவோலையை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னைவிட வடிவேலு சோ க்யூட்”- ராஷ்மிகா ட்வீட்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான படம் கிரிக் பார்டி. இந்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பால பலரின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார். 
 

rashmika

 

 

தற்போது வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன்  ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் படம் பீஷ்மா. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது செமையாக வைரலானது. இந்நிலையில் அவருடைய ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அதை ட்விட்டரில் பகிர்ந்து, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என்று பகிர்ந்துள்ளார். 

 

 

Next Story

வடிவேலுவால் கமலின் அடுத்த படம் வெளியாவதில் சிக்கல் ?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனைகளை வடிவேலு தற்போது தீர்த்துவிட்டு சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில் மேலும் ஒரு பிரச்சனையில் வடிவேலு சிக்கியிருக்கிறார்.
 

vadivelu

 

 

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தலைவன் இருக்கின்றான் படத்தை கமல் இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வடிவேலுவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்கேவிடம் வடிவேலு, ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அந்த படத்தில் கதை சரியில்லை என்று பல மாறுதல்களையும் செய்துள்ளார். இதுபோல நாட்களை வடிவேலு கடத்தியுள்ளார். இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது. எனவே, கொடுத்த முன்பணம் ஒரு கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார் நடிகர் ஆர்.கே. அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை. இதையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆர்.கே. புகாராகக் கொடுத்துள்ளார். 

அந்தப் புகாரில், ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவலே வெளியாகாத நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு வடிவேலுவால் வெளியாவதில் வந்துள்ளது.