Skip to main content

மெரினாவில் 2000 போலீசார் குவிப்பு

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

சென்னை மெரினா கடற்கரையில் 2000 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2000 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் 16 அமைப்புகள் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 
 

marina

 

எனவே போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்து விடக்கூடாது  என்பதற்காக அங்கும் சேப்பாக்கம் மைதனத்திலும் 2000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். காந்தி சிலை முதல் உழைப்பாளர் சிலை வரை மெரினாவிற்கு செல்வபவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மெரினா உட்புற சாலையில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் முன் எச்சரிக்கையாக சாலையில் கடந்த கற்களையும் அகற்றினர். போராட்டகார்களுடன் மோதலை தவிர்க்க போலீசாருக்கு உயர்அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்