Skip to main content

கார் விபத்து; சம்பவ இடத்திலேயே பறிபோன 2 உயிர்!

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

2 passed away in car accident near bhuvanagiri

 

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளி) அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வழிபட காரில் அதே ஊரைச் சேர்ந்த தருண்ராஜ்(19) பரிமளா(42) பழனிவேல்(44) விக்கி(28) ஓட்டுநர் ஆகிய 4 பேரும் வந்துகொண்டிருந்தனர்.   

 

கார் வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியதில் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பரிமளா மற்றும் தருண்ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  பின்னர் இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையில் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதிக் கொண்டு இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்