Skip to main content

சென்னை விமானநிலையத்தில் 1 கிலோ தங்க கட்டிகளை கடத்த முயன்ற 2 பேர் கைது

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
சென்னை விமானநிலையத்தில் 1 கிலோ தங்க கட்டிகளை கடத்த முயன்ற 2 பேர் கைது

சென்னை விமானநிலையத்தில் தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஷார்ஜாவிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஷேக் அலி என்பவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரின் பைகளை பிரித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு கிலோ தங்கக் கட்டிகளை அவர் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு 32 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்