Skip to main content

மோடியைபோல தமிழ் மொழி கற்கும் சோனியா காந்தி..! மகளிர் மாநாட்டில் வீடியோ ரிலீஸ்..!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Sonia Gandhi learns Tamil like Modi ..! Video release at women's conference ..!
                                                  கோப்புப் படம் 


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழகத்தைக் குறி வைத்து தேசியக் கட்சிகள் களமிறங்க பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்தில் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவற்றை நடத்த அதற்கான பட்டியல்கள் தயாரித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

 

அந்த வகையில், தமிழகத்தில் பிப்ரவரி கடைசி வாரத்தில் காங்கிரஸின் மகளிர் மாநாட்டை நடத்த முடிவு செய்திருக்கிறார் சோனியா காந்தி. சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி தலைமையில் அந்த மாநாட்டை நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

தமிழகத்தைக் குறிவைக்கும் பிரதமர் மோடி, தமிழர்களைக் கவர்வதற்காக கடந்த சில வருடங்களாகவே தமிழில் சில வாக்கியங்கள் பேசுவதையும், திருக்குறளை சுட்டிக்காட்டிப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். மோடியின் தமிழ் பேச்சு பல்வேறு தளங்களில் ஆரோக்கியமாக பார்க்கப்பட்டிருக்கிறது.

 

மூன்று நாள் தேர்தல் பரப்புரை பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தியும் தமிழர்களின் கலாச்சாரத்தையும், தமிழின் பெருமையையும் புகழ்ந்து பேசினார். அதில் மோடியின் தமிழ்ப் பேச்சையும் எதிர்மறையாக விமர்சித்திருந்தார். அந்த அளவுக்குத் தமிழர்களைக் கவர்வதற்காக தமிழ் மொழியை கையில் எடுத்துவருகின்றன தேசியக் கட்சிகள்.

 

பாஜக மோடியை தொடர்ந்து, காங்கிரசின் சோனியா காந்தியும் தமிழ் மொழியை கற்று வருகிறார். மொழியின் ஆளுமையை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறார் சோனியா காந்தி. இந்த நிலையில், சோனியா காந்தி தமிழில் பேசுவதை வீடியோவாக தயாரிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

 

அடுத்த மாதம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகளிர் மாநாட்டில் சோனியாவின் தமிழ்ப் பேச்சு வீடியோவை பிரியங்கா ரிலீஸ் செய்வார் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். சட்டமன்றத் தேர்தல் என்பதால் சோனியாவின் தமிழ்ப் பேச்சு, தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கும் என்றும் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.