Skip to main content

மழை, வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும்! பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! - பா.ம.க வலியுறுத்தல்!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

anbumani ramadoss

 

மழை, வெள்ளப் பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும் எனவும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பா.ம.க வலியுறுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்துவிட்ட போதிலும், அதன்காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

 

பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்திருப்பதால் நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைத் தாக்கிய நிவர் புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்ததால், அப்புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. 

 

அதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களைத் தாக்கும் என்று அஞ்சப்பட்ட புரெவி புயலை சமாளிக்கவும் அரசு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அவற்றையும் கடந்து, புரெவி புயல் மற்றும் மழையால், பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

புரெவி புயலால் தென் மாவட்டங்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்படும். காவிரி பாசன மாவட்டங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிகக் கடுமையான மழை பெய்திருக்கிறது. 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ அளவுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 33 செ.மீ அளவுக்கும் மழை பெய்துள்ளது. பலத்த மழை காரணமாக, சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மட்டும் தொடர் மழை காரணமாக 50 -க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

தொடர் மழையால் கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில், ஒரு லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. பயிர்களைச் சூழ்ந்துள்ள நீர் வெளியேற்றப்படாவிட்டால் பயிர்கள் அழுகும் ஆபத்துள்ளது.

 

தொடர்மழையால் நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பெருமாள் ஏரி நிரம்பி வலிவதால், வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி வழிகிறது. இதேநிலை இன்னும் சில மணி நேரத்திற்குத் தொடர்ந்தால் கடலூர் மாவட்டம் வெள்ளக் காடாகி, மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். 

 

கடந்த வாரம் தாக்கிய நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து கடலூர் மாவட்டம் இன்னும் மீளாத நிலையில், புரெவி புயலின் பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. மழை நீடித்தால் கடலூர் மாவட்டத்தில் சமாளிக்க முடியாத அளவுக்குப் பேரழிவுகள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இரு நாட்களாகப் பெய்து வரும் மழையால், ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 

 

சென்னையை ஒட்டியுள்ள ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியவை நிரம்பிவிட்டதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.
 

cnc

 

இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் மழையால் மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவிழந்த நிலையில், தொடர்ந்து கடலில் நிலை கொண்டிருப்பதால், அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 

இத்தகைய சூழலில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யவும், தொடர்மழை நீடிக்கும் பகுதிகளில், நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். சேதமடைந்த பயிர்கள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து உடைமைகளுக்கும் இழப்பீடு வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

 

புயல் பாதிப்புகளைச் சரி செய்யத் தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து விரைவாக நிதியுதவி பெற்று நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.