Skip to main content

வருமான வரித்துறை சோதனை செய்யட்டும்... மடியில் எனக்கு கனமில்லை... காங்கிரஸ் வேட்பாளா் 

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

          தி.மு.க பொருளாளா் துரைமுருகன் வீடு மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வருமான வரி துறையினா் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தோ்தல் நேரத்தில் நடந்த இந்த சோதனை  வேட்பாளருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 

h. vasanthakumar congress candidate parliament election 2019



கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளா் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார் போட்டியிடுகிறார். இந்தநிலையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் சோதனை செய்தது போல் வசந்தகுமாரின் வசந்த் அன் கோ நிறுவன கடைகளிலும் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் அங்கும் வருமான வரித்துறையினா் சோதனை செய்ய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 
 

           இதற்கு பதில் அளித்த வசந்தகுமார், எனது கடைகளில் பணப்புழக்கம் அதிகம் இருக்கிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது உண்மை தான். ஏனென்றால் எனக்கு கடைக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதில்லை. விலைக்கேற்ற பணத்தை வாங்கி கொண்டு தான் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனால் பணப்புழக்கம் இருக்கும். 
 

             அதே போல வருமான வரி சோதனைக்கு நான் பயப்பட மாட்டேன். 38 ஆண்டுகளாக வருமான வரியை கட்டி வருகிறேன். அதுவும் முறையாக தான் கட்டி வருகிறேன். எந்த அரசையும் என் நிறுவனம் இது நாள் வரையிலும் ஏமாற்ற வில்லை இதனால் மடியில் எனக்கு கனம் இல்லை என்றார்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.