Skip to main content

சைக்கிள் பேரணியில் வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம் (படங்கள்) 

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 


தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பாஜக சார்பாக சென்னை மாநகராட்சி 129 வார்டில் போட்டியிடும் செந்தில்குமாரை ஆதரித்து அக்கட்சியின் கலை கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் சைக்கிள் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்