Skip to main content

ஹெல்மெட்டில் இருந்த பாம்புடன் 11 கிமீ பயணம்...வண்டியை நிறுத்திய பின்பு நடந்த அதிர்ச்சி!

Published on 12/02/2020 | Edited on 13/02/2020

இளைஞர் ஒருவர் ஹெல்மெட்டுக்குள் பாம்பு இருப்பதை அறியாமல் 11 கிமீ வாகனம் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வாசுதேவ். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து ஹெல்மேட்டை கழட்டியுள்ளார். அப்போது அதில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.

 

jk



இதைபார்த்து அதிர்ச்சியான அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். பிறகு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவரது உடலில் விஷம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து நிம்மதியான அவர், முதல் வேளையாக வீட்டிற்கு சென்று அந்த ஹெல்மெட்டை தீவைத்து எரிந்தார். பாம்பு ஹெல்மெட்டில் 11 கிமீ-க்கு மேல் பயணம் செய்தும் அவரை சீண்டாமல் எப்படி இருந்தது என்று அப்பகுதி மக்கள் அச்சரியமடைந்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்