Skip to main content

16 ஆண்டுகளுக்குபிறகு பிறந்த இசையமைப்பாளரின் குழந்தை விபத்தில் உயிரிழப்பு!!!

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
balabhaskar


 

மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலாபாஸ்கர். திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி  விபத்திற்குள்ளானது. இதில் அவரது இரண்டுவயது குழந்தை தேஜஸ்வினி உயிரிழந்தது.  இசையமப்பாளர் பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஓட்டுநர் தூங்கியதால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணமாகி 16 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதால் அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்