Skip to main content

கவலையின்றி வாழ்வோர் நகரங்கள் பட்டியல்; டெல்லியை பின்னுக்கு தள்ளிய சென்னை!!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018

 

CHENNAI

 

 

 

ஆண்டுதோறும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நாட்டில் கவலை மாற்றும் நெருக்கடி இல்லாமல் வாழ்வோர் இருக்கும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் கவலை இன்றி வாழ்வோர் நகரங்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டார் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி. கொல்கத்தாவை தவிர மொத்தம் பங்கு கொண்ட 111 நகரங்களில்  மராட்டிய மாநிலத்தை  சேர்ந்த புனே நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் நிவி மும்பையும் மூன்றாம் இடத்தில் மும்பையும் உள்ளது.

 

மேலும் அந்த பட்டியலில் திருப்பதி, சண்டிகார், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து 4 முதல் 10 இடங்களில் உள்ளன. இந்த  கவலை மாற்றும் நெருக்கடி இல்லாமல் வாழ்வோர் பட்டியலில் சென்னையானது 14-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி 65-வது இடத்திலுள்ள நிலையில் இந்த பட்டியலில் கடைசி இடத்தை உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூர் பிடித்துள்ளது.       
 

சார்ந்த செய்திகள்