Skip to main content

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரமாக குறைந்தது!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

பர

 

இந்தியாவைப் பொருத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கரோனா வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 422 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நேற்று (02.08.2021) ஒரே நாளில் 38,884 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் இதுவரை 3.17 கோடி பேர் நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 3.08 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 4.04 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். நோய்த்தொற்று காரணமாக இதுவரை 4.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்