Skip to main content

செய்வினையை திருப்பி அனுப்பும் மூர்க்கன் சாத்தான்! கேரளாவிற்கு படையெடுக்கும் தமிழக மக்கள்!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018
moo

 

 

 

    கேரளா என்றாலே  ஜோதிடம், மாந்த்ரீகம், வழிபாட்டு தலங்கள், மசாஜ் போன்றவைகளுக்கு பெயர் போய் வருகிறது. அதுபோல்தான் கேரளாவில் உள்ள பாலக்காட்டிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆலத்தூர் அத்திபட்ராவில், மாங்கோட்டு காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கேரளாவில் உள்ள குருவாயூருக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமாக இருந்து வருகிறது. அதோடு இக்கோவில் வளாகத்திலேயே கோட்டையல் ஹவுஸ் குடும்பத்தைச் சேர்ந்த மேல்சாந்தி கங்காதர மன்ற அடிகளார் தலைமையில் பரிகாரம் செய்யக்கூடிய மூர்க்கன் சாத்தான் சாமியும் இருக்கிறது. இக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முதலில் பகவதி அம்மனை தரிசித்துவிட்டு, அதன்பின் மூர்க்கன் சாத்தானிடம் பரிகாரம் செய்து வருகிறார்கள்.

 

kp

 

இப்படி வழிபாட்டுத்தலமும், பரிகாரமும் செய்யக்கூடிய இடங்கள் கேரளாவில் பல இருந்தாலும் கூட இக்கோவிலுக்குத்தான்  கேரளா பக்தர்களோடு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற வெளிமாநிலம் மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான், துபாய், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் வந்து போனாலும் கூட தமிழகத்திலிருந்து தான் பெரும்பாலான மக்கள் வந்து பகவதியம்மனை தரிசித்து விட்டு மூர்க்கன் சாத்தானிடம் பரிகாரம் செய்துவிட்டு போகிறார்கள். இதற்காக தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்பட பல பகுதிகளில் இருக்கக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிடர்கள் தான் இக்கோவிலுக்கு மக்களை அழைத்து சென்றும் வருகிறார்கள்.

 

இப்படிப்பட்ட கோவிலுக்கு மக்களை அழைத்துச் செல்லக்கூடிய திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் உள்ள வ.உ.சி. தெருவில் இருக்கும் ஜோதிடர் கந்தசாமி வீரபாண்டியனிடம் (செல் எண் : 7871478290) கேட்டபோது... எங்களிடம் வரும் மக்கள் திருமணம், பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, தொழில் நஷ்டம், கணவன்-மனைவி பிரச்சனை இப்படி சில பிரச்சனைகளை அவர்களுடைய ஜாதகத்தை வைத்து கணித்து சொல்லிவிடுவோம். இப்படி சொல்லும்போது செய்வினை கோளாறின் மூலம் மக்களை முடக்கி இருக்கிறார்கள் என்று கணிப்பில் தெரிந்தால் உடனே பரிகாரம் செய்து திருப்பி விடலாம் அல்லது தீர்த்துவிடலாம். அதற்கான கோவில்தான் ஆலத்தூர் பகவதியம்மன் சன்னிதானத்தில் உள்ள மூர்க்கன் சாத்தான் சாமி நீங்க ஒருமுறை வந்து பார்த்துவிட்டு போனாலே செய்வினை விலகி விடும் என்று மக்களிடம் சொல்லி அழைத்துக்கொண்டு அங்குள்ள பணிக்கரிடம் விட்டுவிடுவோம். அந்த பணிக்கர் பிரசனம் பார்த்து செய்வினை உள்பட அனைத்துக்கும் பரிகாரம் சொல்லுவார் என்று கூறினார். 

 

பகவதியம்மனை வழிபட்டு விட்டு வரும் மக்கள் மூர்க்கன் சாத்தானிடம் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜாதகத்தை கொடுப்பார்கள். அதன்மூலம் சோவி போட்டு பிரசனம் பார்க்கும்போது குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது, வியாபார போட்டி, பொறாமை செய்வினை எல்லாம் தெரிந்துவிடும். அதன்பின் தான் மூர்க்கன் சாத்தானுக்கு செய்ய வேண்டிய பில்லிசூனியம், ஏவல், மாந்ரீகம், பூதகனம் போன்ற அனைத்து தோஷங்களையும் நீக்குவதற்கான பரிகாரங்களை எழுதிக் கொடுப்போம். அதன்படி மக்களும் சாத்தானுக்கு பரிகாரம் செய்துவிட்டு போய்வருகிறார்கள். இந்த கேரளா மக்களை விட தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் தான் 70சதவிகிதம் பேர் வந்து பகவதியம்மனையும், மூர்க்கன் சாத்தானிடமும் பயனடைந்து போய் வருகிறார் என்றார் ஆலத்தூர் அத்திபட்ராவைச் சேர்ந்த பணிக்கர் தேவநாத். 

 

de

 

மூர்க்கன் சாத்தான் சாமியை ஆலத்தூர் அத்திபட்ரா கோட்டையல் ஹவுசை சேர்ந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் பாரம்பரியமாக பரிகாரம் செய்து வருகிறார்கள். அந்த குடும்பத்தின் மூத்த மேல்சாந்தியான கங்காதர மன்ற அடியாரிடம் கேட்டபோது...

 

gan

 

''எனது தாத்தன், பாட்டன், தகப்பனார் காலத்திலிருந்து மூர்க்கன் சாத்தான் சாமிக்கு பரிகாரம் செய்து வருகிறோம். அப்படி அந்த காலத்திலிருந்து இந்த காலம்வரை எனக்கும், 85 வயதாகிவிட்டது. இருந்தாலும் மக்களும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என ஜாதி மதம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களுமே இந்த மூர்க்கன் சாத்தானிடம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் வந்து பரிகாரங்களை செய்துவிட்டு தான் போகிறார்கள். இப்படி வரக்கூடியவர்களுக்கு மாட்டல், கலசம், கடிக்கலசம், முட்டு என உருவங்கள், பொம்மைகள், கோழி, தேங்காய் உள்பட பல வகைகள் மூலம் பரிகாரங்களை செய்து வருகிறோம். இதில் பெரும்பாலும் செய்வினை கோளாறு மூலம் மக்களின் நடைகளை கொஞ்சம், கொஞ்சமாக முடக்கி விடுவார்கள். அதுபோல் தொழில் நஷ்டத்தை ஏற்படுத்தி அதன்மூலம் இந்த குடும்பத்தையே கஷ்டப்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு விட்டுவிடுவார்கள்.

 

அப்படிப்பட்ட தீராத செய்வினையை பொம்மை மிளகாய் மூலம் பரிகாரம் செய்ய சொல்லி புதைத்து வைக்க சொல்வோம். அப்படி வைப்பதன் மூலம் செய்வினை செய்தவர்களுக்கு அந்த செய்வினை திருப்பி அனுப்புவதின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அந்த செய்வினையிலிருந்து விலகி பழைய நிலைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். அப்படிபட்ட தீராத செய்வினையை கூட இந்த மூர்க்கன் சாத்தான் சாமி எடுத்துவிடுவான். அந்த அளவுக்கு பழம் பெரும் சக்தியாக சாத்தான் சாமி இருப்பதுனாலயே மக்கள் செய்யும் பரிகாரங்களுக்கும் பயன் கிடைத்து வருகிறது. அதனால்தான் இந்தியா மட்டுமல்ல உலகளவில் உள்ள மக்கள் கூட மூர்க்கன் சாத்தான் சாமியை நாடி வருகிறார்கள் என்று கூறினார்!

சார்ந்த செய்திகள்