Skip to main content

உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

ரகத

 

சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

கரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமித்ஷா, பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் இருப்பதால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்