Skip to main content

பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட 5 வயது சிறுமி; சவப்பெட்டிக்குள் தோழி வைத்த அன்புப்பரிசு; உறைய வைக்கும் சம்பவம்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

A fellow girl who put a doll inside the coffin as a last gift; A freezing event

 

புலம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ வந்த 5 வயது சிறுமி கொடூரன் ஒருவனால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அச்சிறுமியுடன் படித்து வந்த தோழி கண்ணீர் விட்டு அழுததோடு, சிறுமியின் சவப்பெட்டிக்குள் பொம்மையை இறுதிப் பரிசாக வைத்த சம்பவம் கேரளாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பீகாரைச் சேர்ந்த அசாஃபக் அலாம் என்பவர் கேரளாவின் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் உள்ள மோகத் பிளாசாவில் அறை எடுத்து தங்கி உள்ளார். அப்பொழுது அருகில் வசித்த மற்றொரு பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் தம்பதியின் ஐந்து வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் இருந்ததும், அவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

 

கேரளாவில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த அந்த சிறுமி படித்து வந்த பள்ளியில் அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்பொழுது அச்சிறுமியின் ஆசிரியைகள், சக தோழி சிறுமிகள், சிறுவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். சிறுமியின் உடல் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது அச்சிறுமியின் உடன் படித்த நெருங்கிய தோழியான சக சிறுமி ஒருவர் கரடி பொம்மையைக் கடைசி பரிசாக சிறுமியின் சவப்பெட்டியில் கண்ணீர் மல்க வைத்தார். இது அங்கிருந்தவர்களை மேலும் உறையும் துயரத்திற்குக் கொண்டு சென்றது. இறுதிச் சடங்கில் பங்கு பெற்றவர்கள் அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறித் தேற்றினர். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்