Skip to main content

திமுக உள்ளே இருந்தால் ஊழல்; வெளியே இருந்தால் ஆர்ப்பாட்டம் -சுப்ரமணியசாமி

Published on 24/06/2018 | Edited on 24/06/2018

 

bjp

 

 

 

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசுகையில்,

 

எப்போதும் ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணுவதுதான் திமுக.  திமுகவின் பழக்கமே அதுதான். ஆட்சியில் இருக்கும்பொழுது ஊழல் செய்வது ஆட்சியில் இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் செய்வது இந்த நிலைப்பாட்டில்தான் திமுக இருந்து வருகிறது என்று கூறினார்.

 

 

 

மேலும் சென்னை- சேலம் எட்டுவழி சாலை மற்றும் அது தொடர்பான எதிர்ப்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, எனக்கு அதுபற்றிய விவரங்களை, தகவல்களை யாரும் என்னிடம் கொடுக்கவில்லை அதனால் அது பற்றி என்னால் பேச முடியாது. அதைப்பற்றி எனக்கு தெரியாது. என்னை தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பவில்லையே? தமிழ்நாட்டிலிருந்து என்னை தேர்ந்தெடுத்து அனுப்புங்க அதைப்பற்றி நான் பேசுகிறேன் என பதிலளித்தார். 

சார்ந்த செய்திகள்