Skip to main content

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பிஎஸ்பி பெண் எம்.எல்.ஏ நீக்கம்- மாயாவதி அதிரடி!

Published on 29/12/2019 | Edited on 29/12/2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டிச.15 ஆம் தேதி டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மீது போலீசார் கடுமையான ஒடுக்குமுறையை மேற்கொண்டனர். இதற்கு நாடு முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து நிலையில், பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

citizenship act  support bsp party mla suspended party leader mayavati announced


 

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த உத்தரபிரதேசம் மாநிலம் பதாரியா சட்டமன்ற தொகுதி பெண் எம்.எல்.ஏ ரமாபாய் பரிஹார் கட்சியிலிருந்து நீக்கி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மேலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் ரமாபாய் பங்கேற்கத் தடைவிதித்து மாயாவதி உத்தரவு.
 

சார்ந்த செய்திகள்