Skip to main content

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

cea subramanian

 

இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து வந்தவர் கே சுப்பிரமணியன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தனது மூன்று ஆண்டுகாலம் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சுப்பிரமணியன், கல்வித்துறைக்குத் திரும்பவுள்ளதாகத் தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கத்திடமிருந்து தனக்கு பெரும் ஆதரவு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்