Skip to main content

சோலார் விளக்கு மூலம் கிராம மக்கள் மனதில் இடம் பிடித்த ஆலியாபட்!!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018

நடிகை ஆலியாபட் கொடுத்த நிதியுதவியை கொண்டு கர்நாடக மாநிலத்திலுள்ள மின்சாரமில்லாத ஒரு கிரம பகுதிக்கு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

 

actress

 

 

 

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கேயார்பேட் பகுதியை சேர்ந்த கிக்கெரி என்ற கிராமம் பல வருடங்களாக மின் வசதியில்லாத, மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத கிரமமாக இருந்து வந்தது.  இந்த நிலையை கேள்விப்பட்ட நடிகை ஆலியாபட் நிதியுதவி கொடுத்துள்ளார். அந்த நிதியுதவியை கொண்டு சோலார் தெரு விளக்கு மற்றும் தனித்தனியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

 

actress

 

 

 

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அந்த கிராம மக்கள் நடிகை ஆலியாபட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதோடுமட்டுமின்றி தங்கள் கிராமத்திற்கு வரும்படி ஆலியாபட்டிற்கு  அழைப்பும் விடுத்துள்ளனர்.   

சார்ந்த செய்திகள்