Skip to main content

அடுத்த 10 நாட்களில் 100 கோடி?... இதுவரை 81.85 கோடி - தடுப்பூசியில் சாதிக்குமா இந்தியா?

Published on 21/09/2021 | Edited on 21/09/2021
yj

 

இந்தியாவில் கரோனா 2ஆம் அலையின் தாக்கம் சற்று குறைந்துவரும் இந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி இந்தியாவில் துரித கதியில் நடைபெற்றுவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 96,46,778 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 81.85 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த 10 நாட்களில் 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வயதுவாரியாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு, 

18 - 44 வயது:

முதல் தவணை - 33,12,97,757

இரண்டாம் தவணை - 6,26,66,347

45 - 59 வயது:
    
முதல் தவணை - 15,20,67,152

இரண்டாம் தவணை - 7,00,70,609

60 வயதுக்கு மேல்:
    
முதல் தவணை - 9,74,87,849

இரண்டாம் தவணை - 5,28,92,011

சுகாதாரத்துறை: 

முதல் தவணை - 1,03,69,386

இரண்டாம் தவணை - 87,50,107

முன்களப் பணியாளர்கள்:
    
முதல் தவணை - 1,83,46,016

இரண்டாம் தவணை - 1,45,66,593

இதுவரை மொத்தம்    - 81,85,13,827

(இன்று காலை 7 மணி வரை)

 

 

சார்ந்த செய்திகள்