Skip to main content

சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை;  ஆசிரியருக்கு 56 ஆண்டுகள் சிறை!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
56 years in prison for the teacher for incident happened boy

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஜப்பார்(60). இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும், இவர் தனது வீட்டில் வைத்து மாணவர்களுக்கு அரபி பாடம் கற்றுக்கொடுத்து வந்துள்ளார். 

இவரிடம் ஏராளமான மாணவர்கள் அரபி பாடம் படித்து வருகின்றனர். அதில் 11 வயது கொண்ட மாணவர் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அப்துல் ஜப்பார் அந்த மாணவரை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று அந்த மாணவரை அப்துல் ஜப்பார் மிரட்டி வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் மனமுடைந்த அந்த மாணவர், தனக்கு நேர்ந்த கொடுமையைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்தப் புகாரின் பேரில் ஓய்வுபெற்ற ஆசிரியரான அப்துல் ஜப்பார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போத்தன்கோடு விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பாலியல் வன்கொடுமை செய்து வந்தவருக்கு எந்தக் கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை’ என்று கூறி அப்துல் ஜப்பாருக்கு 56 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மகன் செய்த கொலைக்குத் துணை நின்ற குடும்பத்தினர்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The family that supported the son's did illegal in delhi

தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் நீரஜ் சோலங்கி. இவருக்கும், பூஜா என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பூஜாவின் மாமியார், அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் பூஜாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அதில் அவருக்கு அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததில் பூஜாவின் கணவரான நீரஜ்ஜுக்கு பெருன் அதிருப்தியை தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பூஜா தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனை விட்டு வெளியே வந்த பூஜா, ரோஹ்டக்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல விரும்பியுள்ளார். ஆனால் அவரது கணவர் நீரஜ் சோலங்கி, குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு காரில் பூஜாவை பின்தொடரும்படி கூறியுள்ளார். நீரஜ் தனது குடும்பத்தினருடன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு முன்சென்றுள்ளார். இதை நம்பி பூஜாவும் தனது சகோதரருடன் நீரஜ்ஜை பின் தொடர்ந்து வந்துள்ளார். 

இதனிடையே, நீரஜ் தனது காரை வேறு பாதைக்கு மாற்றி அந்த இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட குழந்தைகளை நீரஜின் குடும்பத்தினர் புதைத்துள்ளனர். இதற்கிடையே, கார் வேறு பாதைக்கு சென்றவுடன் பூஜாவின் சகோதரர் நீரஜை செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால், அழைப்பு இணைக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த பூஜாவின் சகோதரர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, இரட்டை பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, பூஜா கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும், அந்த உடல்களை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு குடும்பத்தினரே உறுதுணையாக இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
incident in broad daylight; There is excitement in Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றி வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டீக்கடையில் மேகலா என்ற பெண் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேகலா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக மணிகண்டனை பிடித்த அக்கம்பக்கத்தினர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

incident in broad daylight; There is excitement in Paramakudi

இது தொடர்பான விசாரணையில் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த மேகலா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மேகலாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேகலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருதரப்பையும் அழைத்த போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த மேகலாவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.