Skip to main content

விண்வெளி குப்பையாகுமா ஜிசாட் - 6ஏ? இஸ்ரோவின் அடுத்த நகர்வு என்ன?

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

ஜிசாட் - 6A செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு ஜி.எஸ்.எல்.வி. - எஃப் 08 ராக்கெட் கடந்த 29ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

 

GSLV

 

இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன், புரொபல்ஷன் கொடுப்பதற்கான முதல் நிலை பற்றிய தகவலை சனிக்கிழமை காலை 9.22 மணிக்கு இஸ்ரோ வெளியிட்டது. பொதுவாக விண்வெளியில் சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் வேகம் பெறுவதற்காக சிறு புரொபல்ஷன் கொடுக்கப்படும். இதற்கான இரண்டாம் நிலை புரொபல்ஷன் பற்றிய தகவல்களை இஸ்ரோ வெளியிடவில்லை.

 

தொடர்ச்சியாக ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அது நீடிக்கும்பட்சத்தில் விண்வெளிக் குப்பையாகும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும். சுற்றுவட்டப்பாதையை அடைந்தவுடன் பூமியைச் சுற்றிவருவதற்காக கொடுக்கப்படும் புரொபல்ஷன் எரிவாயுவுடன் அது விண்ணில் பறந்துகொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளனர். 

 

அதேபோல், ‘பொதுவாக செயற்கைக்கோள்களில் சோலார் மின்கலங்கள் இருக்கும். ஆனால், விண்வெளிக்கு சென்றவுடன் சோலார் மூலம் மின்கலங்கள் சக்தி பெறாது என்பதால், பூமியில் இருக்கும்போதே முழுமையான சக்தியுடன் அனுப்பப்பட்டிருக்கும். இருந்தாலும், அதில் குறுக்கு சுற்றில் (Short circuit) குளறுபடி ஏற்பட்டிருப்பதுதான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்’ என தெரிவித்துள்ளனர்.

 

விண்வெளிக்கு அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் தொலைந்துபோவது இது முதன்முறையல்ல. இன்சாட் - 1ஏ, இன்சாட் - 1சி, இன்சாட் -2டி ஆகியவையும் இந்த பிரச்சனையைச் சந்தித்துள்ளன. இன்சாட் -2டி 1997ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொலைந்துபோய், அக்டோபர் மாதம்தான் மீண்டும் தொடர்புக்கு வந்தது. ஆக, இஸ்ரோ விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தால் ஜிசாட் - 6ஏ மீண்டும் தொடர்புக்கு வரலாம் என்றே நம்பலாம்.

சார்ந்த செய்திகள்