Skip to main content

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

ALL DISTRICTS COLLECTORS CM PALANISAMY DISCUSSION


கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நாளை (29/04/2020) ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனும் முதல்வர் நாளை (29/04/2020) ஆலோசனை மேற்கொள்கிறார். 
 

இதனிடையே முதல்வர் அறிவித்த, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் மூன்று நாள் முழு ஊரடங்கு இன்று (28/04/2020) இரவு 09.00 மணியுடனும், சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் அமலில் உள்ள நான்கு நாட்கள் ஊரடங்கு நாளை (29/04/2020) இரவு 09.00 மணியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்