Skip to main content

"ஆமாம் ஸ்டாலின் என் அண்ணன்தான்; எங்க சண்டையில் பாஜக நுழைவதை ஏற்கமாட்டோம்..." - சீமான்

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

ுி

 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் நாம் தமிழக முதல்வர் எங்கள் அண்ணன், அவருடன் எங்களுக்கு இருப்பது செல்லச் சண்டைதான் என்று தெரிவித்திருந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது, " உண்மைதான் கூறியிருக்கிறேன். அவர் என்னுடைய அண்ணன்தான். தயாளு அம்மாவை நான் அம்மா என்றுதான் கூப்பிடுவேன், ராஜாத்தி அம்மாளையும் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். 

 

உறவுகள் வேறு, ஆட்சியில் நடக்கும் தவறுகள் வேறு, இரண்டையும் எப்படி ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியும். எங்களுக்குள் நடப்பது அண்ணன் தம்பி சண்டைதான். அதில் எப்படி பாஜகவை உள்ளே அனுமதிப்பது. இது திராவிட கட்சிக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு. அதை நாங்கள் எங்களுக்குள் பார்த்துக்கொள்வோம். அதில் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

 

மேலும் வாரிசு படம் நேரடியாக ஆந்திராவில் ரீலிஸ் செய்ய அம்மாநில வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்துப் பேசிய அவர், " இது மிகவும் தவறான ஒன்று. எல்லா மொழிகளைச் சேர்ந்த படங்களும் தமிழ்நாட்டில் திரையரங்கங்களில் ரீலிஸ் செய்யப்படுகிறது. இதில் தமிழ்ப்படம், தெலுங்கு படம் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. பாகுபலி, ஆர்ஆர்ஆர் எனப் பல படங்கள் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நாங்கள் ஏன் தமிழ்ப்படங்கள் ரீலிஸ் செய்யப்படும் அன்று அந்தப் படங்கள் வருகின்றது என்று கேட்கவில்லை. நாங்கள் கலையைக் கலையாகத்தான் பார்க்கிறோம். அந்த மாநிலம் அந்த நடிகர் என்று இதுவரை பிரித்துப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கும் பழக்கமும் எங்களுக்கு இல்லை.

 

குறிப்பாக அந்த வாரிசு படம் கூட தெலுங்கு இயக்குநர், தெலுங்கு தயாரிப்பாளர் என்று இருவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான். அப்படி இருக்கையில் இது நேரடி தமிழ்ப்படம், அதனால் பண்டிகை காலங்களில் வெளியிட முடியாது என்று கூறினார் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறோம். அதில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நல்ல முடிவு வரவில்லை என்றால் நாங்களும் வேறு முடிவு எடுக்க வேண்டி வரும். தெலுங்கு படத்தைத் தமிழகத்தில் திரையிடலாம் என்று அவர்கள் நினைத்துக்கூட அவர்களால் பார்க்க முடியாது" என்றார்.


 

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.

Next Story

நா.த.க. சின்னம் தொடர்பான விவகாரம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Election Commission action for NtK party symbols related issue

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டது.

Election Commission action for NtK party symbols related issue

இதனையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கபட்ட மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், தீப்பெட்டி, கப்பல், படகு, பாய் மரப்படகு அல்லது விவசாயம் சார்ந்த சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மைக் சின்னத்திற்கு பதில் வேறு சின்னம் கேட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.