Skip to main content

வாக்குகள் பாதுகாப்பாக இருக்குமா? - அமைதிக் களத்தில் அடாவடி!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

dddd


 
வேளச்சேரி தொகுதியில் வி.வி.பேட் இயந்திரத்துடன் மூன்று இ.வி.எம் இயந்திரங்களைத் தூக்கிச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஓட்டு மெஷின்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

 

திருப்பூர் தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் கனியாம்பூண்டி கிராமத்தில் நடந்த வாக்குப் பதிவில்... "உதயசூரியன் சின்னத்துக்கான பொத்தானை அழுத்தினால் அந்த ஓட்டு இரட்டை இலைக்கே பதிவானது' என தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டதுடன் சாலை மறியலிலும் இறங்கினர். தி.மு.க. வேட்பாளர் அதியமான் அவசர அவசரமாக ஸ்பாட்டுக்கு வந்தார்.

 

dddd

 

"இயந்திரக் கோளாறு' என்ற விளக்கத்துடன் அந்த மிஷின் அகற்றப்பட்டு, 1 மணி நேரத்திற்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தத் தொகுதியில் அதியமானை எதிர்த்து நிற்பவர் பணபலம் பொருந்திய அ.தி.மு.க. சபாநாயகர் தனபால்.

 

'தொண்டாமுத்தூர் தொகுதியிலுள்ள வாக்குச் சாவடிகளில் சரியான முறையில் வாக்குப்பதிவு நடக்கிறதா?' என தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி 127, 127-ஆ சாவடிகளை ஆராய்ந்து விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்.

 

dd

 

அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அடியாட்களும், வேறுசில நபர்களும், வேலுமணியின் சகோதரர் அன்புவும், சிவசேனாதிபதியை கெட்ட வார்த்தையில் திட்டினர். நன்கு முகமறிந்த நபர் ஒருவர்... "மினிஸ்டரை எதிர்த்தா நிற்கிறாய்? உன் தலையை வெட்டாமல் விடமாட்டேன்' எனச் சொல்லி ஆக்ரோஷமாய் சிவசேனாதிபதியை அடிக்க முற்பட, தி.மு.க.வினர் அவரை பத்திரமாய் வாகனத்தில் ஏற்றியனுப்பினர்.

 

காரை அங்கிருந்து கிளப்பும்போதும்... போலீஸ் லத்தியை வைத்து காரின் பின்புறத்தில் கொலைவெறியோடு தாக்கினர். "தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினரும், பி.ஜே.பி.யினரும் தன் மீதும் தன் காரின் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகவும் இதையெல்லாம் காவல் அதிகாரிகள் சிலம்பரசன், ஜெயக்குமார் வேடிக்கை பார்த்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்...' என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார் சிவசேனாதிபதி.

 

கோவை தெற்குத் தொகுதியில் பி.ஜே.பி.யினர் டோக்கன் சிஸ்டம் மூலம் பண வினியோகம் செய்துகொண்டிருப்பதாய், காங்கிரசின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது. உடனே அங்கே விரைந்த மயூரா ஜெயக்குமார், டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த 3 பேரை விரட்டிப் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவர்களை வண்டியிலேற்றிய தேர்தல் அதிகாரிகள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல்... அந்த மூன்று பேரையும் இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story

விவிபேட் வழக்கு; தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The Supreme Court ordered the Election Commission officer to appear

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

இத்தகைய சூழலில் விவிபேட் தொடர்பான இந்த வழக்கில் இன்று (24.04.2024) உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இன்று காலை இந்த இடைக்கால் உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அதாவது ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன.

தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா. அல்லது விவிபேட்டில் உள்ளதா. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா. விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா. மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

The Supreme Court ordered the Election Commission officer to appear

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.