Skip to main content

"கஸ்தூரி செய்த நூலிழை தவறு ; யாரு எது செஞ்சாலும் கட்சி பொறுப்பேற்க வேண்டுமா...? ” - திருப்பதி நாராயணன் கேள்வி

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

jk

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார்.

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக ட்விட் செய்திருந்த நடிகை கஸ்தூரி பாஜகவில் யாராவது அக்கா தம்பி என்றால் நம்பி விடாதீர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் இந்தக் கருத்து தொடர்பாக பாஜக துணைத்தலைவர் திருப்பதி நாராயணனிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " கஸ்தூரியின் அனைத்து ட்விட்டர் கருத்துக்களை எப்போதும் பார்ப்பேன். அது எப்போது நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இருந்துள்ளது. இந்தக் கருத்து மட்டும் அல்ல, இதற்கு முன்பு அவர் தெரிவித்த அனைத்து கருத்துக்களின் அடிப்படையிலும் இதைச் சொல்கிறேன். அவருடைய இந்தக் கருத்தில் மட்டும் கஸ்தூரி ஒரு நூலிழை தவறு செய்துவிட்டதாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு தனிமனிதர்கள் செய்கின்ற தவற்றுக்கெல்லாம் கட்சி பொறுப்பேற்க முடியாது. இது எங்கள் கட்சிக்கு மட்டும் இல்லை, அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். 

 

ஒரு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். இதற்கு திமுக பொறுப்பேற்றுக்கொள்ள முடியுமா? இது தனிப்பட்ட மனிதர்கள் செய்கின்ற தவறாகத்தான் பார்க்க வேண்டும். நான் இதில் திமுகவை மட்டும் குற்றம் சொல்கிறேன் என்று பார்க்க வேண்டாம். அதிமுகவை எடுத்துக்கொள்ளுங்கள், காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள், சில இடங்களில் கொலை வரை சென்ற சம்பவங்களை எல்லாம் நாம் பார்த்து வருகிறோம். இது இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் நடக்கிறது. தனி மனிதன் பேசினாலே அதற்குக் கட்சி பொறுப்பு என்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

 

திமுகவில் சைதை சாதிக் என்ற ஒரு நபர் மிகப்பெரிய அளவில் ஆபாசமாகப் பேசினார். அவர் மீது கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது. நீங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளார்களே என்று கேட்கிறீர்கள், இது ஒரு போதுமான நடவடிக்கையா? உங்களுக்கு இது முதலில் திருப்தி ஏற்படுத்துகிறதா? இந்த விவகாரமாவது இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற தொலைப்பேசி உரையாடல். ஆனால் சைதை சாதிக் பொதுக்கூட்டத்தில் இவ்வாறு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார். இதை திமுக ஆதரிக்கிறது என்று சொல்வீர்களா? தனிப்பட்ட பேச்சுகளுக்கு இவ்வளவு கேள்விகளை பாஜகவை பார்த்துக் கேட்கும் நபர்கள் திமுகவைச் சேர்ந்த இவரின் நடவடிக்கைக்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.