Skip to main content

அதிமுக யாருக்குச் சொந்தம்? - முடிவுகட்டும் தேர்தல்! 

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

Who owns ADMK? - Let's end the election!

 

‘இது தேர்தல் அல்ல. நம் இனத்தவர்க்கான கணக்கெடுப்பு. நம் இனத்தவரைப் பழித்தவரைப் பழிவாங்கு. நீ எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும், வாக்களிக்க வேண்டிய சின்னம் இது மட்டும்தான். நம் இனத்திற்குத் துணை போனால், நாளை உன் தலைமுறை வாழும்’ - நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் வாட்ஸ்-ஆப்பில் பரப்பப்பட்ட தகவல் இது!

 

குறிப்பிட்ட ஒரு சாதியைத்தான் ‘இனம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். தங்கள் இனம் வாழ வேண்டுமென்றால், ஆட்சியிலோ, கட்சியிலோ, அத்தனை அதிகாரமும் தங்கள் கைக்கு வந்தாக வேண்டுமென்பதே, அந்த இனத்தில் ஒரு சிலரது நோக்கமும் திட்டமுமாக உள்ளது. ஒவ்வொரு சாதியினரும் இதே ரீதியில் வாக்களிக்க முற்பட்டால் தமிழகம் என்னாவது? சில கட்சிகள், சாதி அரசியலை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, பிரதான கட்சிகளைக் கவனத்தில் கொள்வோம்!

 

Who owns ADMK? - Let's end the election!

 

1949இல் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கிய நாளில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிஞர் அண்ணா ‘கொள்கை பரப்புவதே நமது முதல் பணி.’ என்றார். வைதீக மதத்தினூடாகவே தமிழரிடையே சாதி புகுத்தப்பட்ட நிலையில், ‘வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தைச் செழிக்கச் செய்தல் வேண்டும்.’ என்று வலியுறுத்தினார். அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சரான பிறகு, ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 1967இல் சட்டமன்றத்தில்,  இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து, சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேறச் செய்தார். அவருக்குப் பிறகு முதலமைச்சராகவும், இறக்கும் வரையில் திமுக தலைவராகவும் இருந்த கலைஞர் கருணாநிதி, உறுதியான கொள்கைப் பிடிப்புடனே வாழ்ந்தார்.

 

Who owns ADMK? - Let's end the election!

 

கலைஞருக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராகி 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும்கூட, ‘பிறப்பு அடிப்படையிலான சாதி, இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில், திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட கலப்பு திருமண நிதியுதவி திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும். ஆதிதிராவிடரோ, மலைவாழ் பழங்குடியினரோ, பிற இனத்தவரை மணந்துகொண்டால், நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படும்.’ எனக் குறிப்பிட்டு, பெரியார்,  அண்ணா, கலைஞர் உயர்த்திப் பிடித்த சாதி மறுப்பு கொள்கையில், உறுதியாகவே நிற்கிறது திமுக.  

 

Who owns ADMK? - Let's end the election!

 

பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்த ‘உயர்ந்த பிரிவினர்’ என்று மனு ஸ்மிருதி குறிப்பிடுவதால், மற்ற அனைவரையும் தங்களுக்கு கீழானவர்களாகவே நடத்திய பிராமணர்களுக்கு எதிராக,  வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கையை வலியுறுத்தி,  பிராமணரல்லாதோருக்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பே, நீதிக்கட்சி என்று அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம். நீதிக்கட்சியை சுயமரியாதை இயக்கத்தோடு இணைத்து, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் விழிப்புணர்வு இயக்கமாக மாற்றியமைத்து, திராவிடர் கழகம் எனப் பெயரிட்டார் பெரியார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவானதுதான் திராவிட முன்னேற்ற கழகம். ஆக, சாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே இன்றளவிலும் செயல்பட்டு வருகிறது திமுக. 

 

Who owns ADMK? - Let's end the election!

 

திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலையோ, அதன் கொள்கைகளோ(?), காலப்போக்கில்  மாற்றம் கண்டுவிட்டதால், குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பிடியில் அக்கட்சியைக்  கொண்டுவர,  ‘ஒற்றுமையான வாக்களிப்பே பலனளிக்கும்’ என இத்தேர்தலில், தமிழகம் முழுவதும் பரவலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 

அதிமுகவுக்கு இப்படியொரு நிலைமை ஏன் வந்ததென்றால், ‘அக்கட்சியின் அம்சமே அப்படித்தான்!’ எனச் சொல்லும்படியாக இருக்கிறது. ஏன் தெரியுமா? 

 

தொடரும்..

 

  

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.