Skip to main content

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி யாருக்கு? பெண் நிர்வாகிகள் போட்டா போட்டி! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Who is the Chairman of Tamil Nadu Congress Committee? Female executives compete!

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அமைப்பு தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு தேர்தலின் மாநில தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய், துணைத்தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின்கரை சனல், அஞ்சலி நிம்பால்கர், தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

Who is the Chairman of Tamil Nadu Congress Committee? Female executives compete!

 

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல் வருகிற ஜூன் 10-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். ஆகஸ்டு முதல் வாரத்தில் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒரு பெண் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் காங்கிரஸில் உள்ள பெண் நிர்வாகிகள், தாங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும் என முனைப்பு காட்டிவருகின்றனர். 

 

Who is the Chairman of Tamil Nadu Congress Committee? Female executives compete!

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும், விஜயதாரணி அந்தப் பதவிக்கு தகுதியானவர் என அவரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். விஜயதாரணி, தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உருப்பினராக இருந்து வருகிறார். இவர் தற்போது, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாகவும் பதவி வகித்துவருகிறார். மேலும், கடந்த 11 வருடமாக தேசிய மகளிர் காங்கிரஸில் நிரப்பப்படாமல் இருந்த கட்சிப் பதவிகளை இவர் பொதுச் செயலாளருடன் நிர்வாகிகளை நியமித்தார். அப்படி கடந்த 11 வருடத்தில் மட்டும் இவர் 360 பேருக்கு பதவி கொடுத்துள்ளார். 

 

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற வசந்தகுமார் கரோனா காரணமாக மறைந்தார். அதனைத் தொடர்ந்து 2021ல் சட்டமன்றத் தேர்தலுடன் சேர்ந்து அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது, விஜயதரணிக்கு அந்த எம்.பி. தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து அவரின் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால், அப்போது வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், விஜயதாரணி எந்தவித மனகசப்பும் இன்றி தேர்தல் பணிகளை மும்முரமாக செய்தார். அதனால், அவருக்கு இந்த முறை தலைவர் பதவிக்கு அவர் பெயர் பரிந்துரைக்க வேண்டும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

 

Who is the Chairman of Tamil Nadu Congress Committee? Female executives compete!

 

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தற்போதைய கரூர் நாடாளுமன்ற உருப்பினருமான ஜோதிமணி, தொடர்ந்து தேசிய அளவிலான அரசியலில் மும்முரமாக இயங்கிவருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டை தாண்டியும் இந்திய அளவில் வன்கொடுமை விவகாரங்களிலும், பெண் உரிமை விவகாரங்களிலும் தீவிரமாக அவர் இயங்கிவருகிறார். அதனால், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என இவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர். 

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொறுப்புகளில் இருக்கும் பெண் நிர்வாகிகள் பலரும், சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிகளில் இல்லாத தங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு உள்ளிட்ட காங்கிரஸின் மூத்தத் தலைவர்களை அணுகி வருகின்றனர். 

 

 

Next Story

வெளியேறிய விஜயதாரணி; வீடியோ வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
The video was released by the Tamil Nadu Congress for Vijayadharani who left from party

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

விஜயதாரணி 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தாகவும் அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்ததாகவும், ஆனால் சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று (24-02-24) பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (பக்கத்தில்) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்பு பேசிய ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. அதில் ராகுல் காந்தி, ‘எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்’ என்று கூறியுள்ளார். 

Next Story

'ராமர் கோவில் கட்ட அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது'-கே.எஸ்.அழகிரி கேள்வி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
nn

ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து வந்தது என முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ரொம்ப கொச்சையான கேள்விதான். கோயில் கட்டினால் ஆட்சிக்கு வந்திட முடியுமா? ஒரு கோவிலை கட்டி விட்டால் ஆட்சிக்கு வந்து விட முடியும் என எந்த முட்டாள் நினைப்பான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் எனக்குத் தெரிந்து எங்கள் கிராமங்களில் கும்பாபிஷேகம் செய்தவர்கள் எல்லாம் அடுத்த பஞ்சாயத்து போர்டு எலக்சனில் தோற்று இருக்கிறார்கள். காரணம் மக்கள் அதற்காக வாக்களிப்பது இல்லை.

அது வேறு இது வேறு. இன்றைக்கு அயோத்தியில் நடைபெற்று இருக்கின்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்திய அரசாங்கத்தினுடைய பணமோ, உபி அரசாங்கத்தினுடைய பணத்தையோ நீங்கள் தண்ணியாக செலவிடுகிறீர்களே. அது எப்படி நியாயமாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டில் எப்படி அதைச் செய்ய முடியும்? எந்த நியாயம் எந்த சட்டம் அதை அனுமதிக்கிறது. நீங்கள் ரயிலை எல்லாம் இலவசமாக அனுப்புகிறீர்கள். எப்படி அது சாத்தியம். யார் அதற்கு பணம் கட்டியது? இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அத்தனை லட்சம் கோடி உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. அதற்கு கணக்கு காட்ட முடியுமா? ராமருக்கான புகழைக் கெடுத்து விடாதீர்கள் இதைத்தான் நான் பாஜகவிற்கு, ஆர்எஸ்எஸ்க்கும் சொல்லிக் கொள்வது. அவர் அப்பழுக்கற்றவராக இருந்தார். ஆனால் அவருடைய பெயரை பாழ்படுத்துகிறீர்கள் நீங்கள். அது தவறு என்பதை நாம் பரப்புரையாக கொண்டு செல்ல வேண்டும். அச்சப்படக்கூடாது'' என்றார்.