Skip to main content

யார் அந்த அதிகாரிகள்; அமைச்சர் வீட்டு ரெய்டில் நடந்தது என்ன? - ‘திமுக’ சித்திக் விளக்கம்!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 Who are those officers; What happened in the minister's house raid? - 'DMK' Siddique's explanation!

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது; அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சம்பவங்களை மையப்படுத்தி திமுகவின் செய்தித் தொடர்பாளர் சித்திக் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பதில் பின்வருமாறு.

 

வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு வரும் பொழுது அவர்களை மறித்து ஊர் மக்கள் சுற்றி வளைத்து வருமான வரித்துறையினரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அவர்களை வலியுறுத்தினர். ஆனால், அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளனர் வருமான வரித்துறையினர். மேலும் சில நாட்களுக்கு முன்பு பிஜேபியினர் சிலர் வருமான வரித்துறையினர் போல் நடித்து சில வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். அதனைக் கருத்தில் கொண்டுதான் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள். மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக பிஜேபியின் தமிழக பொறுப்பாளர் அண்ணாமலை  நான் சொன்னது போல் ரெய்டு நடந்துள்ளது. இதனால்தான் பொதுமக்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ளனர் என்றிருக்கிறார்.

 

மேலும் இந்த பிஜேபி, அரசு அதிகாரிகளை தன்வசப்படுத்தி அவர்களை தங்களுக்கு சாதகமாக்கி வருகின்றனர். இதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே, எங்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்று ஒப்புக்கொள்கின்றனர். மேலும் பாராளுமன்றத்தில் எந்தவித சட்ட மசோதாவையும் விவாதத்துக்கு உட்படுத்த மறுக்கின்றனர். மேலும் சில மாதங்களுக்கு கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி செய்தபோது  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருந்த டி.கே. சிவகுமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால் அன்றைக்கு இருந்த பிஜேபி அரசு 40 சதவீத ஊழல் நடந்தது என்று ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. இதேபோல் தான் ப. சிதம்பரம் அவர்கள், பிஜேபியினால் பொருளாதாரத்தில் பொதுமக்கள் நாம் என்னென்ன இழப்புகளை சந்தித்து வருகிறோம் என்று மாநாடு ஒன்றில் பேசினார். ஆனால், அடுத்த நாளே ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடந்தது.

 

இதேபோல் பிஜேபியை யார் எதிர்த்து கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சில மாயைகளை செய்து சில இடங்களை கைப்பற்றியது பிஜேபி. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் பிஜேபியை ஓட ஓட விரட்டி அடித்தனர். மேலும் கர்நாடகாவின் முந்தைய முதலமைச்சரான குமாரசாமி அவர்கள் சட்டமன்றத்தில், பிஜேபியோடு இணக்கமாக செயல்படவில்லை எனில் எங்களுக்கு அமலாக்கத்துறையினால் ரெய்டு நடத்தப்படும் என்று எங்களை மிரட்டினார்கள் என்று அனைவர் முன்பும் சட்டமன்றத்தில் பேசினார்.

 

அதனால் டி.கே. சிவகுமார், ப.சிதம்பரம், குமாரசாமி என பிஜேபியை எதிர்த்து கேள்வி கேட்டால் ரெய்டு நடத்தி அவர்களின் அதிகார பலத்தை காட்டி வருகின்றனர். ஆனால் இவர்கள் இதுவரை நடத்திய வருமான வரிச் சோதனையின் போது எடுத்த ஆதாரங்களை சேகரித்து வழக்கு நடக்கிற புள்ளி விவரம் வெறும் 0.35 % தான் என்று புள்ளி விவரம் சொல்கிறது. அதனால் இந்த பிஜேபி அரசு எங்களிடம் பூச்சாண்டி காட்டுகிறது. இதை பார்த்து இந்த திராவிட அரசு என்றைக்கும் துளி கூட பயம் கொள்ளாது.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.