Skip to main content

குஜராத்தில் இந்தியின் நிலை என்ன?

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்தி பேசுவதாக கூறுவதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இந்தி பேசும் அவர்கள் கூடுதலாக ஏதேனும் மொழியை கற்றிருக்கிறார்களா என்பதை சொல்லவே மாட்டார்கள்.

இந்தி பேசும் மாநிலங்களில் நடக்கும் தேர்வுகளில் இந்தித் தேர்வுகளில்கூட பெரும்பான்மை மாணவர்கள் தோல்வி அடைந்த செய்திகளை அப்படியே மூடி மறைத்து விடுவார்கள்.

 

 What is the status of Hindi in Gujarat?


2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மொழிவாரி கணக்கெடுப்பு 2018ல் வெளியிடப்பட்டது. அதில் இந்திய மக்கள் தொகையில் 43.63 சதவீதம்தான் இந்தியை தாய்மொழியாக கூறியிருக்கிறார்கள்.

இந்த கணக்கெடுப்பின்படி, இந்திய மாநிலங்களில் மத்திய மற்றும் வட இந்தியாவில் உள்ள சில மாநிலங்களைத் தவிர, பெரும்பாலானவை இந்தி பேசாத மாநிலங்களாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில இந்தியை இரண்டாவது மொழியாக தேர்வு செய்திருக்கின்றன.

பெரும்பாலான தென் மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேச்சு மொழியாக இல்லை. அத்துடன் அவர்கள் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்திருக்கின்றனர்.

வட இந்தியாவில் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்தியை முதல் மொழியாக வைத்திருக்கின்றன. இவற்றில் மொத்த ஜனத்தொகையில் 96 சதவீதத்திற்கு மேல் இந்தி பேசுகிறவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல்மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். ஆனால், அவருடைய மாநிலத்திலேயே இந்தி பேசும் மக்கள் 30 சதவீதத்திற்கும் கீழாகவே இருக்கிறார்கள்.

தென் மாநிலங்களும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் தவிர்த்து மற்ற வடகிழக்கு மாநிலங்களும் மிகக்குறைந்த அளவே இந்தி பேசுகிறார்கள்.

மொத்தமுள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 23 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்தியை முதல் விருப்பமாக கொள்ளவில்லை. இந்த 23 மாநிலங்களிலும் 16 மாநிலங்களில் இந்தியை இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக மிகமிகக் குறைந்த சதவீதம் பேர்தான் தேர்வு செய்கிறார்கள்.

குஜராத், மேற்கு வங்காளத்தில் மிகக்குறைந்த மக்களே இந்தி பேசுகிறார்கள். இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு இந்தி பேசுகிறவர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். மகாராஸ்டிரா, பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் குறைந்த அளவே இந்தி பேசும் மக்களைக் கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் பேசுகிறவர்கள் மிகமிக குறைவாக இருக்கிறார்கள். ஆனால், குறைவாக இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் பேசுவோர் சதவீதம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 20.15 சதவீதமும், கேரளாவில் 18.49 சதவீதமும் ஆங்கிலம் பேசுகிறார்கள்.

இந்நிலையில்தான் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்திருக்கிறது. இந்த கொள்கையை இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலில் சிக்கும் போதைப்பொருட்கள்; மீண்டும் மீண்டும் குஜராத்தில் பரபரப்பு 

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
narcotics at sea; Repeated agitation in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில், நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைதாகியுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் குஜராத் கடல் பகுதியில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில் 173 கிலோ போதைப் பொருள் சிக்கியது. இந்திய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக குஜராத்தில் அதிகப்படியான போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்; பரபரப்பில் குஜராத்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Consequences of narcotics in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து படக்கில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணைந்து போதைப்பொருள் கடத்தியவர்களை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.