Skip to main content

32 ஆண்டுகள் சிறை... வழக்கும், வலிகளும் - பேரறிவாளன் கடந்து வந்த பாதை!

Published on 18/05/2022 | Edited on 19/05/2022

 

timeline rajiv gandhi case and perarivalan release

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அதிரடியாக அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26  பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.  இதில் பேரறிவாளனுக்காக அவரது தயார் அற்புதம் அம்மாள் பல சட்டப்போராட்டங்களை நடத்திய நிலையில் பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்...

 

1991 ஆம் ஆண்டு - ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை தாக்குதலால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

 

ஜூன் 21 1991 -  இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சிவராசன் மற்றும் தனு ஆகியோர் அணிந்திருந்த வெடிகுண்டு பெல்டின் செயல்பாட்டிற்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக கூறி தனது 19 வயதில் பேரறிவாளன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு. அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (தடா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

ஜனவரி 28, 1998 - இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும்  சென்னை தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

 

மே 11, 1999 - இந்த வழக்கின் மேல் முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்டு பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இவ்வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

 

அக்டோபர் 8, 1999 - பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

அக்டோபர் 27,1999 - தமிழக ஆளுநருக்கு இவர்கள் நால்வர் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 

 

ஏப்ரல் 19, 2000 - நளினியின் தூக்கு தண்டனையை குறைக்க முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. மேலும் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இவர்களது தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

 

ஆகஸ்ட் 12, 2011 - சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவர் அனுப்பிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக மத்திய அரசு கூறியது.

 

ஆகஸ்ட் 30, 2011 - முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதே நாளில், சென்னை உயர்நீதிமன்றம் மூவரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.

 

பிப்ரவரி 18, 2014 - பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதற்கு அடுத்த நாளே பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 போரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

 

பிப்ரவரி 20, 2014 - இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

 

டிசம்பர் 2015 - இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

ஆகஸ்ட் 25, 2017 - கைது செய்யப்பட்டு 15 வருடம் கழித்து முதல் முறையாக  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையைச் சந்திக்க பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஜாமீன் வழங்கியது.

 

செப்டம்பர் 6, 2018 - பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

 

செப்டம்பர் 9, 2018 - இவ்வழக்கில் தொடர்புடைய 7 போரையும் விடுதலை செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

 

ஜனவரி 23, 2021 - 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவு குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

மே 19, 2021: பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகும் அவரது ஜமீனை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நீட்டித்து வந்தது.

 

இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று(18.5.2022) அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த 32 ஆண்டுகள் பேரறிவாளனும், அவரது தாய் அற்புதம் அம்மாளும் வழக்குகளுடன் சேர்ந்து ஏகப்பட்ட வலிகளையும் சுமந்து வந்திருக்கின்றனர். பல தடைகளையும், இன்னல்களையும் தாண்டி அற்புதம் அம்மாள் ஒரு வரலாற்று அற்புதத்தையே நடத்தி இருக்கிறார். 

 

 

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Next Story

“பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாடுபடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சராக பொன்முடி பதவியேற்றதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

We will strive to stop the abuse of power by fascist forces CM MK Stalin

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.