Skip to main content

விவசாயத்தைப் போற்றிய தொண்டைமான் மன்னர்கள் விவசாயி தோளில் ஏர்கலப்பையுடன் கூடிய புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு! 

Published on 24/06/2022 | Edited on 25/06/2022

 

Thondaiman kings who praised agriculture invented a new inscription with a plow on the farmer's shoulder!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரமைப்பு மட்டுமின்றி நீர்ப்பாசனமுறைக்கும் முன்னோடியான மாவட்டமாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கவிநாடு கண்மாயில் ஒரு மடையை திறந்தால், ஒரே நேரத்தில் 6 வாய்க்கால்களில் சீராக தண்ணீர் பாயும் உன்னதமான நீர்பாசன முறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. அந்த மடை பாசன முறை இன்றளவும் உள்ளது நீர்ப்பாசனமுறைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது பெருமையாக உள்ளது.

 

இதேபோல, பின்னாள் வந்த தொண்டைமான் மன்னர்களும் நகரமைப்பை மட்டுமின்றி நீர்ப்பாசன முறைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு பல கல்வெட்டு சான்றுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், தற்போது ராஜகோபால தொண்டைமான் மன்னரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் எல்லை வரையறை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்ப்பாசன கல்வெட்டும், அந்த கல்வெட்டில் ஒரு விவசாயி தன் தோளில் ஏர் கலப்பையை தூக்கிச் செல்லும் சித்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் விவசாயிக்கும் எத்தனை உதவியாக இருந்தார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

 

Thondaiman kings who praised agriculture invented a new inscription with a plow on the farmer's shoulder!

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி ஊராட்சிக்குட்பட்ட கீழவாண்டான் விடுதி வயல்வெளியில் விஜயரகுநாத ராயத் தொண்டைமன்னரால் வெட்டப்பட்ட விசய ரகுநாத சமுத்திரம் எனும் பாசனத்திற்கான நீர்நிலை ஏற்படுத்தியதையும், அதற்கான நீர் வெளிப்போக்கு அமைப்பான கலிங்கி அமைப்பது குறித்தும் தகவல் அடங்கிய கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரங்கன், முன்னாள் ஓய்வுபெற்ற ஆணையர் மணிசேகரன், ஆத்தங்கரை விடுதி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கல்வெட்டின் சிறப்பம்சம் குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது, "புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், இயற்கை வளங்களை போற்றி வளர்ப்பதிலும், பொதுமக்களுக்கு உரிய மதிப்புகளை வழங்குவதிலும், சிறந்து விளங்கினர் என்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நாம் அறியலாம். குறிப்பாக தொண்டைமான் மன்னர்களின் சிறப்பாக அவர்கள் அமைத்த நீர்நிலைகளையும் இன்னும் பிற கட்டமைப்புகளையும் கூறலாம்.

 

Thondaiman kings who praised agriculture invented a new inscription with a plow on the farmer's shoulder!

 

என்றாலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் தொண்டைமான் மன்னர்கள் பெயரில் குளம் அமைக்கப்பட்டது குறித்தோ, தகவல்களை அரிதாகவே பார்க்க முடிகிறது. ஆனால் ஆத்தங்கரை விடுதி சமுத்திர கலிங்கி கல்வெட்டில் மன்னர் பெயரிலேயே அமைந்திருப்பதுடன் விவசாயி ஏர் கலப்பையுடன் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது போல விவசாயி, ஏர்கலப்பை கல்வெட்டு அமைப்புகள் பார்ப்பது அரிது. அதனால் தொண்டைமான மன்னர்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் போற்றி பாதுகாத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

 

தற்போது ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழா நடக்கும் நேரத்தில் இந்த கல்வெட்டை எங்கள் குழு கண்டுபிடித்திருப்பது பெருமையாக உள்ளது" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.