Skip to main content

தடுப்பூசி மையங்கள் குறித்து தகவலறிய தனியார் நிறுவனத்தின் புதிய முயற்சி!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

techjays portal to discover covid vaccination centre

 

கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவை மிகவும் மோசமாக ஆட்கொண்டு வருகிறது. இந்தக் கொடிய வைரஸால் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துவருகின்றனர். மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.29 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது. 

 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரேநாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் இந்த தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,49,992 ஆக உயர்ந்துள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 3,56,082 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சூழலில், இதுவரை இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் தற்போது 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில், தடுப்பூசி நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், சிகிச்சை உபகரணங்களை அதிகரித்தல், மக்களை சமூக இடைவெளி மற்றும் சுயசுகாதாரம் ஆகியவற்றைப் பராமரிக்க ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களும் மே 1, 2021 முதல் கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்கள் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சரியான முறையில் தடுப்பூசி போடுவதில்லை.

 

dd

 

இப்படியொரு நெருக்கடியான நேரத்தில், டெக்ஜேஸ் (techjays) என்னும் மென்பொருள் நிறுவனத்திலுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒரு புதிய தடுப்பூசி போர்டலை (https://vaccinenotify.in/) கட்டமைத்துள்ளனர். இதன் மூலம், நமது வயது, மாவட்டம், பின்கோட் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்களைத் தேடிப் பயனடைய முடியும். இந்தப் போர்டல் கோவின் (coWIN) API-யிலிருந்து நிகழ்நேர ஆதாரங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசி போட இடங்கள் தேடும்போது, அந்நேரத்தில் இல்லையெனில் கூட, பின்னர் இடம் கிடைத்தவுடன் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிக்கு உடனடியாக குறுந்தகவல் மூலம் தடுப்பூசி மையம் குறித்த தகவல் அனுப்பப்படும். 

 

கரோனா ஏற்படுத்திய பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், தமிழக இளைஞர்களால் துவங்கப்பட்டு, அமெரிக்கா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் உள்ள பல்வேறு குழுமங்களுக்கு மென்பொருள் சேவையை வழங்கிவரும் Techjays எனும் இந்நிறுவனத்தின் இந்தப் புதிய வசதி, தற்போதைய கடினமான சூழலில், மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.