Skip to main content

அமைச்சரின் அறிவிப்பும்; பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சியும்!  

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

tamilnadu archeological study in school teacher field work 

 

பள்ளிகள் தோறும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை தொடங்க மதுரையில் ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்பட்டது.

 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் விரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாகக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாட்களுக்கு களப்பயணத்துடன் உண்டு உறைவிடப் பயிற்சி வழங்க இருப்பதாக அறிவித்தார்.

 

இப்பயிற்சி ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1000 ஆசிரியர்களுக்கு சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், கோவை மற்றும் தர்மபுரி ஆகிய 9 மண்டலங்களில் பயிற்சி நடத்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிற்சியின் முதல் சுற்று மதுரை மண்டலத்தில் கீழடியில் 06.03.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

 

tamilnadu archeological study in school teacher field work 

இதில் தொல்லியல் ஓர் அறிமுகம், பழைய புதிய இரும்புக் காலப் பண்பாடு, தமிழ்நாட்டு அகழாய்வுகள், நாணயவியல், கல்வெட்டியல் ஓர் அறிமுகம், தமிழி கல்வெட்டுகள், நடுகற்கள், பல்லவர், பாண்டியர், சோழர் கால கலை மற்றும் கட்டடக்கலை, செப்பேடுகள், பாறை ஓவியங்கள், தமிழ்க் கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அமைத்தல் போன்றவை பயிற்சியில் இடம்பெற்றன. பயிற்சியை பூங்குன்றன், வேதாசலம், ராஜவேலு, இனியன், செந்தீ நடராஜன், கரு. ராஜேந்திரன், ஆறுமுக சீத்தாராமன், ராமநாதபுரம் ராஜகுரு, புதுக்கோட்டை மணிகண்டன், சிவகங்கை காளிராசா, பாலாபாரதி, சிவகளை மாணிக்கம் ஆகிய தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்தினார்கள்.

 

tamilnadu archeological study in school teacher field work 

களப்பயணமாக கீழடி, வரிச்சியூர் குன்னத்தூர், கீழக்குயில்குடி, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தொல்லியல் சின்னங்களை ஆசிரியர்கள் பார்த்து அறிந்து கொண்டனர். இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களைத் தொடங்கி மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து கற்றுத்தர உள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வழிகாட்டுதலில், இணை இயக்குநர் வைகுமார் மேலாண்மையின் கீழ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை மதுரை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, துணை முதல்வர் ராம்ராஜ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவி பேராசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் செய்தனர். 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.