Skip to main content

தை மாதத்தை ஏற்பதிலும் கலைஞர் எதிர்ப்பு அரசியல்!!!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018

உலகின் எந்த ஒரு மொழியினருக்கும் இல்லாத வகையில் தமிழனின் ஆண்டுக் கணக்கிற்குத்தான் அருவறுப்பான பின்னணி இருக்கிறது.

 

tamil newyear


 

 

 

சர்வதேச அளவில் ஜூலியஸ் சீசர் உருவாக்கிய ஜூலியன் காலண்டர் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது, 16 ஆம் நூற்றாண்டில் போப் 13 ஆவது கிரிகோரி திருத்தி அமைத்தார். எனவேதான், தற்போதைய காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.

 

ரஷ்யாவில், சீனாவில் என்று ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு மொழிக்குழுவிலும் ஒவ்வொரு விதமான ஆண்டுக்கணக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆரியர் வருகைக்கு முந்தைய தமிழர்கள் காலத்தை பெரும்பொழுது என்றும், சிறுபொழுது என்றும் பிரித்துக் கணக்கிட்டார்கள்.

 

ஒரு ஆண்டை சித்திரை வைகாசி மாதங்களை இளவேனில் காலம் என்றும், ஆனி, ஆடி மாதங்களை முதுவேனில் காலம் என்றும், ஆவணி, புரட்டாசி மாதங்களை கார் காலம் என்றும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர் காலம் என்றும், மார்கழி, தை மாதங்களை முன்பனி காலம் என்றும், மாசி, பங்குனி மாதங்களை பின்பனி காலம் என்று ஆறாக பிரி்தது பெரும்பொழுது என்றார்கள்.

 

ஒரு நாளை, வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரித்து சிறுபொழுது என்றார்கள்.

 

 

 

ஒரு நாள் என்பது 60 நாழிகை கொண்டது என்றும், ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள் என்றும் கணக்கிட்டார்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் என்பது இந்த கணக்குக்கு சரியாகப் பொருந்துகிறது என்கிறார்கள்.

தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்று சூரியனின் பெயரையும் கோள்களின்  பெயரையும் வைத்தனர்.

 

தமிழில் ஆண்டுக் கணக்கு என்பது எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், பேரரசரின் பிறப்பு, மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட நாளின் தொடக்கம், ஒரு தலைநகரின் தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பழங்காலத்தில் தமிழர்கள் தொடர் ஆண்டு முறையை கடைப்பிடித்துள்ளனர். சங்க இலக்கியங்கள், செப்புப்பட்டயங்கள் மூலம் இந்த விவரம் கிடைத்திருக்கிறது. தமிழ், தமிழ்நாடு தொடர்பான வரலாற்று நிகழ்வுகளை தொடர் ஆண்டுக் கணக்கில் குறித்துவைத்து பாதுகாக்க தமிழர்கள் முயற்சிக்கவில்லை. அதற்கு 60 ஆண்டுகள் சுழற்சி முறையே காரணம் என்கிறார்கள்.

 

உலகின் பல பகுதிகளில் 60 ஆண்டு சுழற்சி முறை நடைமுறையில் இருந்திருக்கிறது. தமிழகத்தில் ஆரியர்கள் வருகைக்குப்பிறகே 60 ஆண்டுகள் சுழற்சி முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பது புரியத் தொடங்கியபோது, தொடர் ஆண்டுமுறைக்கு மாறவேண்டும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.

 

குறிப்பாக தமிழ் 60 ஆண்டுகளின் பெயர்களும் சமஸ்கிருத மொழியில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, அந்த 60 பெயர்களுக்கும் சொல்லப்படும் கதை அருவறுப்பாக இருக்கிறது. அதாவது, கிருஷ்ணரின் காதலியாக நாரதர் உருமாறினாராம். இருவரும் இணைந்து 60 ஆண் குழந்தைகளை பெற்றார்களாம். அந்த 60 குழந்தைகளின் பெயர்களைத்தான் தமிழ் ஆண்டுகளின் பெயர்களாக வைத்திருக்கிறார்களாம்.

 

 

 

அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத கதை, மற்றும் தொடர்ச்சியை கருத்தில் கொண்டே, யேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்று 1921 ஆம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்ற தமிழக முதல்வராக இருந்த கலைஞர் 1971 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார்.

 

அதன்பிறகு, தமிழ் ஆண்டின் முதல் மாதம் எது என்ற கேள்வி விவாதத்துக்கு வந்தது. விளைச்சலை அறுவடை செய்து உற்சாகமாக இருக்கும் மாதம் தை மாதம். அந்த மாதத்தையே தமிழ் ஆண்டின் தொடக்க மாதமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையையும் 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர்தான் நிறைவேற்றினார்.

 

தமிழ், தமிழர் அடையாளம், தமிழர் நாகரிகம், தமிழர் உரிமை ஆகியவற்றை பாதுகாக்கும் கலைஞரின் நடவடிக்கைகளை ஆரியர்கள் ஒருபோதும் ஏற்பதில்லை. வழக்கம்போலவே, தை மாதம் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்ற கலைஞரின் ஆணையையும் ரத்து செய்தார் ஜெயலலிதா.

 

தமிழ், தமிழ்தேசியம் என்று ஏதேதோ பிதற்றும் ஒரு கூட்டம் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒரு வார்த்த பேசவில்லை என்பதில்தான் இருக்கிறது அவர்களுடைய கலைஞர் எதிர்ப்பு அரசியல்.

 

அவர்களுக்கு தமிழைப் பாதுகாப்பதைவிட, கலைஞருக்கு வரலாற்றுப் பெருமை சேர்ந்துவிடக்கூடாது என்பதுதான் முதல் நோக்கம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.