Skip to main content

"நீட் தேர்வு தொடர்பான வழக்கு கூட நீதிமன்றத்தில் இருக்கிறது... நீட் தேர்வை நடத்தாமலா போய்விட்டார்கள்.." - சூர்யா சேவியர் தடாலடி!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

hjk


உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய கருப்புக் கொடி போராட்டத்தின் போது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை  ஒன்பது பேர் இறந்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மத்தியப் படை பாதுகாப்பு போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பதற்றம் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் அதிகாரத்தில் இருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குறிப்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர் என யாரும் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சியினர் வைத்து வரும் சூழ்நிலையில் இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் சூரியா சேவியர் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில் பின்வருமாறு, 

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏற்றியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் இதுவரை ஒன்பது  பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி அரசுக்கு எதிராக தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக இதுவரை பாஜகவைச் சேர்ந்த யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

நல்லவேளை இவர்கள் இரங்கல் தெரிவிக்கவில்லை, நிச்சயம் விவசாயிகள் ஆத்மா சாந்தியடையும். இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகள். எனவே இவர்களிடம் இரங்கலை எதிர்பார்ப்பதை விட ஒரு முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. கொலையாளிகளிடம் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று நாம் கேட்பது கூட தவறுதான். டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை. ஆனால் கவுதமியை சந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ஏழாண்டு காலத்தில் ஒருமுறை கூட பத்திரிக்கையாளரைச் சந்திக்க அவருக்கு நேரமில்லை, நாடுநாடாகச் சென்று குடை பிடித்து போஸ் கொடுக்க முடிகிறது. வெட்கமாக இருக்கிறது இதை எல்லாம் பார்ப்பதற்கு, இதற்கு எப்போது விடிவுகாலம் வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறோம். 

 

அங்கே விவசாயிகள் தங்களின் நிலம் பறிபோய் விடும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை முரட்டுத் தனமாகத் தாக்குகிறார்கள். அவர்களுக்காக யார் வரப் போகிறார்கள் என்ற அலட்சியம் இவர்களை இந்த அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியாவில் இத்தனை கோடி நிலம் இருக்கிறது, ஆனால் கோடிக்கணக்கான பேருக்கு இருக்க இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு இதுவரை எதாவது செய்திருக்கிறதா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்றைக்கும் உ.பி, பீகார் உள்ளிட்ட இடங்களில் மக்கள் முயல் வசிக்கும் கூட்டை போல சிறிய இடத்தில் வசித்து வருகிறார்கள். அங்கே தமிழ்நாட்டை போல் பெரியார் பிறக்கவில்லை. அதனால் அவர்களுக்கு நாம் அடைந்த உரிமைகள் இன்றளவும் கிடைக்கவில்லை. எனவே நாம் அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

 

மற்றொரு முதல்வர் விவசாயிகளைக் கட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரை நாம் அடிக்கலாமா? விவசாயிகள் மீது வண்டியேற்றியவரை நாம் தாக்கினால் சும்மா இருப்பார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம் என்றால் இது என்ன மாதிரியான ஜனநாயக நாடு என்ற கேள்வி எழுகிறது. ஆகையால் இவர்கள் திருந்த வேண்டும், இல்லை திருத்தப்பட வேண்டும். இது இரண்டில் ஒன்று நடந்தால் தான் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நல்லது நடக்கும். நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகளைப் பேசக்கூடாது என்று தொடர்ந்து ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் நீட் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எதற்காகத் தேர்வைக் கட்டாயப்படுத்தி நடத்துகிறீர்கள். இதற்கு அவர்களிடம் பதில் இருக்கிறதா? வாயை மூடி அமைதியாக கடந்து சென்றுவிடுவார்கள்.

 

 

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.